சுரண்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
1 min read
Udayanidhi Stalin’s birthday celebration at Surandai
30.8.2023
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்
டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா சுரண்டையில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் ஈ.ராஜா எம் எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சுரண்டை வே.ஜெயபாலன், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசினார்.
அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி மாணவர்களுக் கான ஆட்சி. இந்தியாவி லேயே தமிழகத்தில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி மாணவர்களின் அறிவு பசியுடன் வயிற்றுப் பசியையும் போக்கியுள்ளார். கல்லூரி செல்லும் மகளிருக்கு உதவித்தொகை என தொடர்ந்து மாணவர் களின் நலனில் அக்க
றையுடன் தமிழக முதல்வர் ஆட்சி செய்கிறார். தமிழக அரசின் பாடத்திட்டத்தை படித்து உலக அளவில் தமி ழர்கள் தரம் உயர்ந்துள்ளது. நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
விளையாட்டுத்துறையில் மாணவர்களுக்கு சிறபான எதிர்காலத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்து வருகின்றார் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண் டன், தலைமை பொதுக்குழு உறுப் பினர் ராஜேஷ்வரன், கடையம் ஒன் றிய செயலாளர் மகேஷ் மாயவன், மற்றும் திமுக நிர்வாகிகள் ஆறுமுகச்சாமி, சாம்பவர் வடகரை கோ.மாறன்,சக்தி,சாமுவேல் மனோகர். எஸ்.கே.ஆர். ராமசாமி, சங்கரநயினார், கனகராஜ் முத்துப் பாண்டியன், பொன் செல்வன், ரமேஷ், சசிகுமார், வைகை கணேசன், ஸ்டீபன் சத்ய ராஜ், ஜேம்ஸ், சார்லஸ், பாலன், சங்கர், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், பவுன், அருணா. கவுன்சி லர்கள் சிவஞான சண்முக லட்சுமி, அந்தோணி சுதா ஜேம்ஸ், செல்வி, அம்சா பேகம், சபர்நிஷா, சுசீலா. கற்பக செல்வி மற்றும் ஏரா ளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.