ஸ்ரீவைகுண்டம் பகுதியில் டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் நிவாரண உதவி
1 min readDr. Ayyathurai Pandian relief aid in Srivaikundam area
29.12.2023
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் அய்யாத்துரை பாண்டியன் நிவாரண உதவிகளை வழங்கினார்
அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர்
டாக்டர்.எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் தொடர்ந்து 2-வது நாளாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி ஸ்ரீவைகுண்டம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட
பத்மநாபமங்கலம்
கிராமத்தில் வசிக்கும் 750 குடும்ப அட்டைதாரர்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனையின் பேரில்
அரிசி, பருப்புகளை கொண்ட வெள்ள நிவாரண பொருள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்
எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார்
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன்
அவர்கள் முன்னிலை வகித்தார் . அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் அய்யாத்துரை பாண்டியர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் குமார்,அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் சுப்பையா, மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, பாலசுப்ரமணியன், ஆறுமுகநயினார், ஊராட்சி மன்ற தலைவர்
இசக்கி, அதிமுக கிளை கழக செயலாளர் பலவேசம்,
பெரியசாமி, மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிச்சாமி,
பசும்பொன் பேச்சிமுத்து, மாரியப்பன்,மணிகண்டன்
உட்பட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.