தென்காசி மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம்
1 min readTenkasi District Health Board meeting
29.12.2023
தென்காசி மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம்மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந் திரன் தலைமையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சுகாதாரப் பேரவை 2023 வருடத்திய கூட்டம் இன்று (27,12,2023) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் , தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) வரவேற்புரை நிகழ்த்தி கடந்த காலங்களில் சுகாதாரப் பேரவை தீர்மானக் குழு அடிப்படையில் நிறைவேற்றிய நடவடிக்கைகளை விளக்கி கூறினார்.
மேலும் இந்த வருடத்தில் நிறைவேற்ற கூடிய தீமானங்களை பத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் சமர்பித்தனர். மேலும், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் நல பணியாளர் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி சமர்பித்தார். மேலும் 2023 வருடத்தில் அதிக பிரசவங்கள் செயல்படுத்திய வட்டார அளவில் உள்ள சுகாதார நிலையங்களான கடையம், பாவூர்சத்திரம் மற்றும் நெட்டூர் ஆகியவற்றிற்கு முறையே பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களான சாம்பவர் வடகரை, சுரண்டை மற்றும் வீராணம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முறையே பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைக்கப்பட்ட பொதுசுகாதாரம் மற்றும் ஹோமியோபதி தொழுநோய்த்துறையின் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை இரவிச்சந்திரன் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் இணைஇயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) முரளிசங்கர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன் மற்றும் அனைத்து வட்டார மருத்துவ செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.