பதவி உயர்வு பெற்று செல்லும் தென்காசி கலெக்டருக்கு ஊராட்சி தலைவர்கள் நினைவு பரிசு
1 min readCommemorative gift from panchayat leaders to Tenkasi Collector who is getting promoted
29.1.2024
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்றுள்ள நுரை இரவிச்சந்திரனுக்கு தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிந்த தோடு அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை இரவிச்சந்திரன் பதவி உயர்வு பெற்று உயர்நிலைக் கல்வி செயலாளராக பொறுப்பு ஏற்பது பாராட்டி தென்காசி மாவட்ட ஊராட்சி மன்றங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் கோவிந்தப்பேரி டி கே பாண்டியன் துணை தலைவர் அன்பு ராணி பொருளாளர் ராஜ்குமார் ஒருங்கிணைப்பாளர் பெரிய பிள்ளை வலசை வேலுச்சாமி ஆலங்குளம் கூட்டமைப்புச் செயலாளர் சந்திரசேகரன் மற்றும் பலர் கலெக்டர் துரை.இரவிச்சந்திரனை சந்தித்து அனைத்து மக்கள் பிரதிநிதியும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களையும் சிறப்பாக வழிநடத்தியமைக்கு நன்றி கூறியதோடு அவருக்கு நினைவு பரிசை வழங்கி பாராட்டினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பினுடைய பொதுச் செயலாளர் வீரபாண்டியன், சங்கரன்கோவில் ஊராட்சி கூட்டமைப்பினுடைய தலைவர் வேலுச்சாமி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.