May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் பகுதியில் திமுக திண்ணை பிரசாரம்

1 min read

DMK campaign in Audaiyanur area

27.2.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி, சாலடியூரில் திமுக சார்பில் திண்ணை பிரசாரத்தை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் துவக்கி வைத்தார்.

தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட சாலடியூரில் இல்லந்தோறும் ஸடாலின் குரல் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.சீனித்துரை தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் காவேரிசீனித்துரை, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திண்ணை பிரசாரத்தை தொடங்கி வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வழங்கினார். அப்போது, திராவிட மாடல் அரசின் சாதனைளை பட்டியலிட்டதுடன், 2024ம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறினார்.

மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் குறும்பலாப் பேரி டால்டன், வளர்மதி ராஜன், பாண்டியன், ராமர், கலைச்செல்வன், கிருஷ்ண மணி, முருகன், ராபர்ட், மார்சல் பிரபு, ராஜேந்திரன், களஞ்சியம், மாரிச்செல்வன், பண்டாரம், கபில்தேவதாஸ், வக்கீல் ஹரி, பூதத்தான், ரிக்கி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.