May 20, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Equality Day Pledge Taking in Tenkasi-Participation of District Collector

13.4.2024
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு சமத்துவ நாள்” உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14 ஆம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று (12.04.2024) மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் சமத்துவநாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

உறுதிமொழியின் விவரம் வருமாறு:-

சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்ட வர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்த எளியமக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வு ஊட்டிய. நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதும் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம்அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) அமிர்தலிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.