தென்காசியில் 26 ம் தேதி உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min readHigher Education Guidance Program in Tenkasi on 26th – Information from District Collector
23.4.2024
தென்காசி மாவட்டத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி மேல்நிலைப்பள்ளியில் 2023 2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வெள்ளிக்கிழமை (26.04.2024) இ.சி.ஈ. ஆண்கள் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11.00 மணிக்கு இ.சி.ஈ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்லூரி படிப்புகளை பயின்று பயன் பெறுவதற்காக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலச்செயலகம் மற்றும் இயக்குநரகம் எஸ்எம்எஸ் தன்னார்வ அமைப்பின் கல்வியாளர்களின் நல்வழிகாட்டுதலுடன் நடைபெற இருப்பதால் 2023 – 2024 ல் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பட்டியல் வெளியீட்டிற்காக காத்திருக்கின்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.