குருக்கள்பட்டியில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
1 min read
Two arrested in Kurukkapatti under the Gangster Prevention Act
5.7.2024
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குருக்கள்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளிகள் இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட குருக்கள்பட்டியைச் சேர்ந்த பெரியதுரை என்பவரை கொலை செய்த வழக்கின் குற்றவாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அல்லித்துரை(29) மற்றும் நம்பிராஜ் என்பவரின் மகன் அருண்குமார் (24) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க *தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.