June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி முறைகேடு- பாஜக அமைச்சர் மகன் கைது

1 min read

BJP minister’s son arrested for embezzlement of Rs 75 crore in 100-day work scheme

17/5/2025
மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் (MGNREGA) ரூ.75 கோடி ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் குஜராத் அமைச்சர் பச்சு கபாத்தின் மகன் பல்வந்த் சிங் கபாத்தை போலீசார் கைது செய்தனர்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை அனுப்பாமலேயே அனுப்பியதாகவும், பணிகள் முடிக்கப்பட்டதாகவும் கணக்கு காட்டி பணம் பெற்றதாக பல்வந்த் சிங் கபாத் புகார் அளிக்கப்பட்டது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்வதற்கான டெண்டரை அமைச்சர் மகன் பல்வந்த் சிங்கின் நிறுவனம் எடுக்காமலே அவரது நிறுவனத்திடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

பச்சு கபாத் குஜராத் மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் வேளாண்மைத் துறை இணை அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *