June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

கிசான் திட்டத்தின் 21-வது தவணை நிதியை விடுவித்தார்

1 min read

PM Kisan: PM Modi to release Rs 18,000 crore to farmers

கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

முதலில் மாநாட்டு அரங்கில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற 17 கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

இதைதொடர்ந்து, கோவை விழாவில் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதியை விடுவித்தார்.

பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். விவசாய நிலம் வைத்திருப்போருக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 தரப்படுகிறது.

3 தவணைகளாக நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயி வங்கிக்கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.6000 வரவு வைக்கப்படுகிறது. மேலும், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *