June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட கருத்து

1 min read

Judges have different opinions in the Sabarimala case

9.4.2026
கேரள மாநிலம் சபரிம லையில் உள்ள ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண் களும் வழி பட அனுமதி அளித்து, கடந்த 2018ல் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்த மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதி சூர்யகாந்த்தலைமை யிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசி யல்சாசன அமர்வு விசாரிக்க தொடங்கியுள்ளது.

2 -வது நாளான நேற்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “மத வழக்கங்கள் மூட நம்பிக்கையா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களுக்கு போதிய புலமை இல்லை.மாறாக அந்த மதத்தின் வழி பாட்டு ஆவணங்களை ஆய்வு செய்து தீர்வுகாண வேண்டும்” என வாதிட் டார்.

அப்போது, நீதிபதி
ஏ.அமானுல்லா, “மத மூடநம்பிக்கையை உச்ச நீதிமன்றம் வரையறை செய்ய முடியும்” என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து துஷார் மேத்தா வாதிடுகையில், “அரசுக்கு சொந்தமான கோயில்களில் பூசாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்க முடியாது. கடவுள் நம்பிக்கை அற்ற, கடவுள் நம்பிக்கை உள்ள அரசுகள் கூட கோயில்களில் பூசாரிகளை நியமிக்க முடியாது. கோயில் பூசாரிகள் பாரம்பரியமாக நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.
அரசு விவகாரங்களில் மதம் தலையிடாத போது. மத விவகாரங்களில் அரசும் தலையிடக்கூடாது. அரவிந்தரை பின்பற்றுவோர் ஒரு மதப் பிரிவினராக உள்ளனர்” என்றார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *