44 வயதில் மீண்டும் தாயான ஷில்பா செட்டி
1 min read22.2.2020
90களில் இந்திய சினிமாவையே ஒரு கை பார்த்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தமிழ் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் தொடர்ந்து ஆட்சி செய்தார்.
குஷி படத்தில் தளபதி விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2007ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை கைவிட்ட சில்பா செட்டி அதன்பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நடத்திவந்தார்.
முதல் ஐபிஎல் போட்டியிலேயே ராஜஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷில்பா ஷெட்டிக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் 44 வயதில் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார் ஷில்பா ஷெட்டி. தனது கணவரின் விந்தணுவை கொண்டு மற்றொரு பெண்ணின் உடலில் புகுத்தி குழந்தையை பெற்று எடுத்திருக்கிறார் ஷில்பா ஷெட்டி.