நயன்தாரா புதிய முடிவால் படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்
1 min readதமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது நம்பர்-1 நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாராவின் மார்க்கெட் சமீபகாலமாக பெரிய அடி வாங்கியுள்ளது. ஹீரோயினை மையப்படுத்திய கதையில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன.
இதனால் தற்போது நயன்தாராவின் மார்க்கெட் சரிந்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பட வாய்ப்புகள் கூட நயன்தாராவின் வீட்டுப்பக்கம் வரவில்லையாம்.
இதனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இதில் விக்னேஷ் சிவனின் படத்தை கட்டாயப்படுத்தி இயக்க சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இனி இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் வேலைக்கு ஆகாது என கவர்ச்சிக்கு ஓகே சொல்லிவிட்டாராம் நயன்தாரா. எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட ரெடி எனவும் உதட்டு முத்த காட்சிகள் என்றாலும் சரிதான் எனவும் நயன்தாரா கூறியுள்ளதாக தயாரிப்பாளர்கள் நயன்தாராவின் வீட்டை நோக்கி படையெடுத்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றுக்கு தனது முன்னழகு தெரியும்படி நயன்தாரா உடை அணிந்து வந்தது அனைவரும் அறிந்ததே.