மாஸ் நடிகரை பின்பற்றும் முன்னணி நடிகர்
1 min readதற்போதைய தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் அந்த பிரபல நடிகர்கள் தான். ஒருவர் எப்போதுமே ரசிகர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது வெளியில் தலை காட்டி வருபவர். ஒருவர் எப்போதுமே தனிமையை விரும்புபவர். இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி விட்டால் அவ்வளவு தான்.
இந்நிலையில் மாஸ் நடிகர் இளம் இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அரசாங்கத்தால் ஏற்பட்ட சின்ன கோளாறால் மாஸ் நடிகருக்காக ரசிகர்கள் ஒன்று சேர்ந்தனர். இதனை தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டு மிரட்டினார் அந்த மாஸ் நடிகர்.
அதேபோல் சமீபத்தில் இன்னொரு முன்னணி நடிகர் ஒருவரின் படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது சிறிதளவு அடிபட்ட செய்தி கேட்டு ரசிகர்கள் இணையதளங்களில் கொந்தளித்தனர். ரசிகர்களின் இந்த அன்பை கண்டு தற்போது அந்த நடிகர் கொஞ்சம் இறங்கி வந்துள்ளாராம்.
இதுவரை எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பதற்கு தடை சொல்லும் அந்த முன்னணி நடிகர் இந்த வாட்டி ரசிகர்களுக்காக அந்த கொள்கையை தளர்த்தி விட்டாராம். இதனால் அவரது உறவினர்கள் வளச்சு வளச்சு அவருடைய போட்டோக்கள் வீடியோக்கள் என இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
தான் நன்றாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய அந்த முன்னணி நடிகர், இனி இதே மாதிரி அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆனந்தப்படுத்த முடிவெடுத்துள்ளாராம். இனியும் பப்ளிசிட்டி பண்ணவில்லை என்றால் வேலைக்கு ஆகாது என இரண்டு மாஸ் நடிகர்களும் இறங்கி அடிக்க முடிவு செய்திருப்பதால் பலர் கலக்கத்தில் உள்ளார்களாம்.
உண்மையிலேயே இருவரும் மங்காத்தா படத்தில் வருவதைப் போல் சத்தமில்லாமல் ஒன்றாக வேலை செய்து வருகிறார்களாம்.