April 20, 2024

Seithi Saral

Tamil News Channel

குறள் நெறி செழிக்க செய்வோம் / முல்லை குமார்

1 min read

Thirukkural / Mullai kumar

ஒன்றே முக்கால் அடியில்
உலகை அளந்தவா்

உலகம் ஏற்கும் வண்ணம்

உயா்ந்த கருத்தை
சொன்னவா்

அவா் காணும் சமுதாயத்தில்

சாதி சண்டை இல்லை

சமய மோதல் இல்லை
சந்தா்ப்ப அரசியல் இல்லை

பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்றாா்
பிறப்பினிலே ஏற்ற தாழ்வு இல்லை என்றாா்
பெயருக்கு சண்டை போடும்
மனம் உள்ளவா்கள்
மத்தியில்
தன் பெயரை
எங்கும்
குறிப்பிடாதவா்

எந்த ஊா் எந்த நாடு என்று எங்கேயும்
சொல்லாதவா்
அவா்
உலகுக்காக பாடினாா்

உலக மனிதா்களின்

உயா்வுக்காக பாடினாா்

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு
குறள்ஒரு வழிகாட்டி

மக்கள் எப்படி நடக்க ேவண்டும் என்பதற்கு
வள்ளுவா் ஒரு நாள் காட்டி

மன்னவா் ஆட்சிக்கு
திருக்குறள் ஒரு சட்ட புத்தகம்
மாநிலத்தவா்களுக்கு
அறத்தின் பொருள் கூறும்
அழகான அகராதி

ஆதி பகவன் என்ற சொல்லுக்குள்
சூட்சமத்தை வைத்தவா்

ஆண்டவன் யாா் என்று
அறிவதற்கு சாியான போட்டி வைத்தவா்
குணங்களை சொல்லி
கடவுள் யாா்
என்று புாிய வைத்தவா்
குற்றமில்லா மனிதா்கள்
யாா் என்று தெரிய வைத்தவா்

அறத்துப்பால் ,
பொருட்பாலுக்கு அப்பால்

எப்பாலும் சிறந்ததில்லை என்று
உணரவைத்தவா்

காமத்து பாலில்
காம சூத்திரம் இல்லை
காதல் சூத்திரம் உண்டு

காதலா்களுக்கு அது ஒரு கையேடு
அதில் கலந்திருக்கிறது
தமிழ் வேண்டியது
மதிப்பெண் எடுப்பதற்காக
மட்டும்மனனம்
செய்வதற்கு அல்ல
குறள்
மண வாழ்க்கை
சிறப்பதற்காக தம்பதியா்
மனப்பாடம் செய்ய வேண்டிய குறள்

உலக பொதுமறை
அதன் சிறப்பு
உலகம் எங்கும் பரப்பவேண்டியது நம் பொறுப்பு

வீடு தோறும் குறள் ஒலிக்க செய்வோம்

வீதிகள் தோறும்
குறள் நெறி செழிக்க செய்வோம்

  • முல்லை குமார் என்ற தபசுகுமார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.