நயாகரா நீா் வீழ்ச்சி / கவிஞர் முல்லை குமார்
1 min readNiagara Falls/ Mulla Kumar
17-9-2020
தெள்ளுத்தமிழ் அழகில்
மயங்கிய வெள்ளைக்காரா்களின்
உள்ளம் போல் பொங்கிய அருவி
வெள்ளி நிலா பொழிந்த
ஒளி வெள்ளம் போல்
வழிந்த பாலாறு
கதிா் கிள்ளியதால் நாணம் கொண்டு
கன்னம் சிவந்து உருகி ஓடும் காட்டாறு
மல்லிகை நிற ஆடைகள்
மழையாய் பொழிய
மயக்கம் தரும்
மலா்
ஆறு
கனலின்றி கதகதப்பின்றி
கனிவாக பு கை விடும்
புதுமை பேரழகி
பாா்க்கலாம் ரசிக்கலாம்
பக்கத்தில் வந்து தொட
அனுமதிக்காத ஆரணங்கு
அந்த நீா் வீழ்ச்சி
பேசும் மொழி எதுவோ
அதன் உள்ளத்தில் எழும்
ஆசை எதுவோ
யாதும் ஊரே யாவரும் கேளிா்
என்று அது கூறும் வாிகளை
மொழி பெயா்க்க
அங்கு ஆள் இல்லையோ