May 26, 2024

Seithi Saral

Tamil News Channel

“மூன்றாவது கணவரையும் நம்பி ஏமாந்தேன்”; நடிகை வனிதாவின் புலம்பலால் மீண்டும் புயல்

1 min read

“I betrayed my third husband”; Actress Vanitha’s lament storms again

22/10/2020
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே இரண் பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலும் ஏற்கனவே திருமணம் ஆனவர்தான்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே இந்த மூன்றாவது திருமணம் நடந்து முடிந்தது. தற்போது அவர்கள் வாழ்க்கை சுமுகமாக சென்றுக் கொண்டிருந்த நிலையில், வனிதா தனது 40வது பிறந்தநாளை கொண்டாட பீட்டர் பால் மற்றும் குழந்தைகளுடன் கோவா சென்றார்.

நம்பி ஏமாந்தேன்

அங்கு பீட்டர் பால் மது அருந்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. சென்னை திரும்பிய பிறகும் பீட்டர் பால் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வீடியோ வெளியிட்ட வனிதா, “பீட்டர் பால் ரொம்ப குடிக்கிறார், நம்பி ஏமாந்துவிட்டேன். தற்போது என்னால் சிரிக்கக் கூட முடியவில்லை. அவர் வீட்டிற்கும் வருவது இல்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். ஹார்ட் அட்டாக் வந்து உயிர் பிழைத்த மனிதர் இப்படி மது அருந்துவதும், புகைப்பிடிப்பதுமாக இருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

கஸ்தூரி பதில்

அந்த வீடியோவை பார்த்த ஒருவர், வனிதாவின் வீடியோ பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கஸ்தூரியிடம் கேட்டார். அதற்கு கஸ்தூரியோ, வீடியோ வேறையா? பார்த்துட்டு சொல்றேன். என் அனுபவத்தில் இது சொல்வதெல்லாம் பொய் ரகம் என்றார்.

அதன் பின் அந்த வீடியோவை கஸ்தூரி பார்த்துள்ளார். அதன்பின்அவர் கூறியதாவது:-
ஓமைகாட், நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். அருமையாக எடிட் செய்து, ஸ்டைலான கார்டு எல்லாம் இருந்தது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்ணுறது என்ன பொழப்போ, புரியலடா சாமி. எல்லாம் பொய், தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க, வனிதா மட்டும் தான் பாதிக்கப்பட்டவர். அது எல்லாம் எதிர்பார்த்தது தான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் புகார் தெரிவிக்கணும்? நம்ப முடியவில்லை.
வீடியோவில் நாலு விளம்பர இடைவேளை வேறு. ஸ்க்ரிப்ட் எடிட் செய்யப்பட்டு, நன்றாக பெர்ஃபார்ம் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் நிறைய சம்பாதிப்பார். பீட்டர் பாலின் மருத்துவ செலவுக்கான பணத்தை சம்பாதிக்க பார்க்கிறார். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

மீண்டும் புயல்

வனிதா மூன்றாவது திருமணம் செய்தபோது பல்வேறு பிரச்சினைகள் வலைதளத்தில் வலம் வந்தன. குறிப்பாக அவருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் கடும் வாக்குவாதம் வந்தது. இப்போது கஸ்தூரி சொன்ன பதிலால் மீண்டும் புயல் வீசும் என்று கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.