ஞானம் வந்த பாதை
1 min readÑāṉam vanta pātaivolume_up19 / 5000
மொழிபெயர்ப்பு முடிவுகள்
The path to wisdom
இனம் புரியாத ஒரு வேதனை-எண்ணற்ற குழப்பத்தில் ஒருவன் திறந்தவெளியில் நடந்து வருகிறான். வாழ்க்கையில் ஒருவித வெறுப்பு. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலை. அது ஒன்றுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. பாழடைந்த ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான். அந்த நேரத்தில் ஒருவன் அவனை காப்பாற்றிவிட்டு சென்றுவிடுகிறான். அப்போது எங்கோ ஒரு தத்துவ பாடல் ஒலிக்கிறது. அது அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. தற்கொலை முடிவுக்கு முடிவுகட்டுகிறான். சற்று நேரத்தில் இன்னொருவன் பாதுகாப்புக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருக்குமாறு கூறிவிட்டு செல்கிறான். அந்த பணம் அவனுக்கு தற்காலிகமாக உதவி புரிகிறது. அதனை கொண்டு தொழில் செய்கிறான். பல்வேறு பிரச்சினை தீர்கிறது. கொடுத்து வைத்த பணத்தை பின்னர் உரியவரிடம் ஒப்படைக்கிறான். இந்த காலத்தில் ஒரு வீட்டில் கண்தெரியாத பெரியவர் முன்பு ஒரு பெண் அமர்ந்து பகவத் கீதையை வாசிக்கிறாள். அந்தபெண்ணின் முகத்தை லேசாக பார்த்த அவனுக்கு அவள் படித்த வாசங்கள் தெளிவாக கேட்டன. அதில் அவன் ஞானம் பெற்றான். இதுதவிர பக்கத்து விட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்துக் கொண்டிந்த வாத்தியார் மூலம் திருக்குறள் அறிவுரைகளையும் கேட்டான். இப்படி கேட்டவற்றையெல்லாம் அவன் படிப்பினையாக கொண்டு வாழ்ந்தான். இன்று அவன் அறநெறி தவறாதவனாக உள்ளான்.
இதனால் அவனுக்கு தன்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றியவன், தற்காலிகமாக பணம் கொடுத்தவன், கீதையை படித்துக்காட்டிய பெண், திருக்குறளை சொன்ன பக்கத்து வீட்டு வாத்தியார்-இவர்கள் அனைவரும் குருவாக தெரிந்தனர். பின்னாளில்தான் தெரிந்தது அவனை காப்பாற்றியவன் ஒரு கொள்ளைக்காரன் என்பதும், பணம் கொடுத்து வைத்தவன் ஒரு கடத்தல் காரன் என்றும் தன்னை காத்துக் கொள்வதற்காகத்தான் அவன் பணத்தை இவனிடம் கொடுத்தான் என்றும், கீதையை படித்துக்காட்டிய பெண்ணோ பிழைப்புக்காக கற்பை விலை பேசுபவள் என்றும், திருக்குறள் சொல்லிக் கொடுத்த வாத்தியார் ஒரு பெண் பித்தன் என்றும் தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் இவனின் மறு வாழ்வுக்கும், ஞான வாழ்க்கைக்கும், அற வாழ்க்கைக்கும் ஆதாரமானவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அதற்கு நேர்மறையானவர்கள். அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய பாடலை எழுதிய கவிஞர் தற்கொலை செய்து கொண்டவர் என்பது பின்னால் அவனுக்கு தெரிந்தது. இப்படி பட்டவர்கள் ஞானம் பெற்ற அவன் அறவழி அல்லாத வாழ்க்கைக்கு திரும்பவில்லை. கெட்டவன் ஒருவனால் காப்பாற்றப்பட்ட அவன் மீண்டும் தற்கொலைக்கு முயலவில்லை. அவர்களுக்காக மனதால் ஒரு நிமிடம் வருந்தினான். மற்றபடி அவர்கள் கெட்ட கொள்கைகள் அவனை சிறிதும் தீண்டவில்லை.
இப்போது புரியும் என்று நினைக்கிறேன். எந்த ரிஷி மூலமும், ரிஷி பின்னமும் நம்மை ஒன்றும் செய்யாது-செய்யக்கூடாது. ஒருவன் கெட்டவன் என்பதால் அவன் வாயில் இருந்து வரும் ஞானம் பொய்யாகி விடாது. அவன் வாயில் இருந்து ஒப்புவிக்கும் திருக்குறள் பொய்யாகிவிடாது. குரு தவறு செய்தார் என்பதற்காக சீடன் கற்ற கல்வி எல்லாம் பொய்யாகி விடாது. நம் உயிரை காக்கும் மருத்துவர் எப்படி பட்டவராக இருப்பார் என்று நாம் ஆராய்வது கிடையாது.
ஒருவன் சட்டத்தின் படி தவறு செய்தால் சட்டம் தண்டனை கொடுக்கட்டும். சத்தியத்தின்படி தவறு செய்தால் இறைவன் தண்டனை கொடுக்கட்டும். சத்தியத்தின் தவறு அவனுக்கும், இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.
-ஆ.பாலன்