கோமியம் குடிப்பதால், எனக்கு கொரோனா இல்லை; பா.ஜ.க. எம்.பி. பேச்சு
1 min readI do not have a corona, because I drink comium; BJP MP Speech
19.5.2021
தான் தினமும் கோமம் குடிப்பதால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூடநம்பிக்கை
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் ஒரேவழியான தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், கோமியம் (மாட்டுச்சிறுநீர்) குடித்தல், சாணம் மற்றும் மாட்டு சிறுநீரை உடலில் பூசிக்கொள்வதால் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்ற மூட நம்பிக்கையும் பல இடங்களில் பரவி வருகிறது. அறிவியல் ரீதியில் எந்த வித சான்றுகளும் இல்லாத இந்த மூடநம்பிக்கை முறை வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ளது.
இந்த நிலையில், தான் தினமும் கோமியம் (மாட்டுச்சிறுநீர்) குடிப்பதால் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று பாஜக எம்.பி. ஒருவர் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக எம்.பி.யான பிரக்யா சிங் தாகூர் தனது கட்சி கூட்டம் ஒன்றில் பங்கேற்றார்.
அந்த கூட்டத்தில் பேசிய பிரக்யா, “மாட்டுச்சிறுநீரை நாம் தினமும் குடித்தால் அது கொரோனாவால் ஏற்படும் நுழையீரல் பாதிப்பை குணப்படுத்தும். எனக்கு மிகுந்த வலி இருந்தது. ஆனால், நான் தினமும் மாட்டுச்சிறுநீர் குடித்து வருகிறேன். ஆகையால், தற்போது நான் கொரோனா வைரசுக்கு எதிராக வேறு எந்த வித மருந்தையும் எடுத்துக்கொள்ள தேவையில்லை. எனக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஏற்படவில்லை” என்றார்.
பாரதீய ஜனதா எம்.பி. பேச்சால் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.