குழந்தை ரகசியத்தை போட்டு உடைத்த கண்ணாயிரம்
1 min readBaby secret- Kannayiram/ Story by Tabasukumar
30/10/2021
கண்ணாயிரம் பிரச்சினை குறித்து அருவா அமாவாசை தலைமையில் நடந்த பஞ்சாயத்து இரண்டு மணிக்கு மேல் நடந்தபோது கவுசல்யா வரவில்லை என்று கண்ணாயிரம் கூறினார். கண்ணாயிரம் அக்கவுண்டில் சேலைவாங்க முயன்ற கவுசல்யாவை மோட்டார்சைக்கிள் வாலிபர் அழைத்துவந்து அருவா அமாவாசையிடம் நடந்ததைக் கூற அவர் கோபம் அடைந்தார்.
கண்ணாயிரம் எதுவும் தெரியாது என்ற போதும் அவரதுமனைவி பூங்கொடி அதை நம்புவதாக இல்லை. கண்ணாயிரம் மனசுக்குள் எல்லா பிரச்சினையும் நம்மை சுற்றியேவருது. என்ன செய்யிறது என்று நினைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.
அருவாஅமாவாசை கண்களை உருட்டியபடி கவுசல்யாவிடம், ஏம்மா கண்ணாயிரம் உன்னை தன்னுடைய மனைவி இல்லைன்னு சொல்லிட்டான். அப்புறம் எப்படி கண்ணாயிரம் அக்கவுண்டில் நீ சேலை வாங்கலாம் என்று மீண்டும் கேட்டார்.
உடனே முதியவர் ஒருவர், ஏன் திருப்பி, திருப்பி அதையே கேட்கிறீங்க.கடைக்காரர்தான் கண்ணாயிரம் அக்கவுண்டில் தர்றேன் னு சொன்னாருன்னு அந்த பெண்ணே சொல்லுச்சே. அப்படின்னா கடைக்காரரிடம்தான் கேட்கணும் என்றார். அப்பம் கடைக்காரரை கூட்டிட்டு வரணுமா மோட்டார்சைக்கிள் வாலிபர் கேட்டார். உடனே கண்ணாயிரம் வேண்டாம். வேண்டாம் என்றார். ஏன் அவரைகூப்பிடக்கூடாதுன்னு சொல்லுற என்று அருவாஅமாவாசை கேட்டார்.
கண்ணாயிரம் மெல்ல அவர் வந்தா பிரச்சினையாகிடும். அவரை கூப்பிடாதீங்க. அவரை நான்பாத்துக்கிறேன். என்றார்.
அருவா அமாவாசை உடனே கண்ணாயிரத்தை பார்த்து நீ எதையோ மறைக்க பாக்கிற என்று முறைத்தார்.
மோட்டார் சைக்கிள் வாலிபரை பார்த்து தம்பி நீகடைக்காரரை அழைச்சிட்டுவா என்று சொன்னார். மோட்டார் சைக்கிள்வாலிபர் உடனே அங்குவிரைந்துசென்றார். ஜவுளிக்கடைக்காரர் அங்கு இல்லை. ஒருமுதியவர் மட்டும் இருந்தார். மோட்டார்சைக்கிள்வாலிபர் அவரிடம் கடைக்காரர் எங்கே என்று கேட்டார். முதியவர் உடனே கடைமுதலாளியா சாப்புட போயிருக்கார். நாலுமணிக்கு வருவார். எதுக்கு தேடுறீங்க சொல்லுங்க என்றார். மோட்டார் சைக்கிள் வாலிபர் குரலை உயர்த்தி, கவுசல்யா என்கிற பெண்ணுக்கு கண்ணாயிரம் அக்கவுண்டில் எப்படி கடைக்காரர் சேலைகொடுக்கலாம். பஞ்சாயத்தில் அவரை விசாரிக்க கூப்பிடுறாங்க. பெரிய பிரச்சினை உடனேவரச்சொல்லுங்க என்றுசொல்லிவிட்டு மோட்டார் சைக்கிள் வாலிபர் பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வந்தார்.
அருவா அமாவாசையிடம்.. கடைக்காரர் சாப்பிடப்போயிருக்கார். பஞ்சாயத்துக்கு உடனேவரச்சொல்லுங்கள் என்று அங்கிருந்தவரிடம் மிரட்டலாக கூறிவிட்டுவந்திருக்கிறேன் என்றார்.
கண்ணாயிரம் விழித்தார். என்ன விழிக்கிற அவர் வரட்டும் அப்புறம் இருக்கு என்று அருவாஅமாவாசை மிரட்டினார் .
அப்போது அங்கிருந்த முதியவர் ஏங்க சேலை பிரச்சினையை பிறகு பாத்துக்கலாம். இந்த சின்னபையன் பிரச்சினைக்கு வாங்க. இந்த பையன் பிறக்க தானேகாரணம் என்று கண்ணாயிரம் சொல்லுறாரே. அதைவிசாரிங்க என்று சொன்னார்.
அருவா அமாவாசை அதுவும்சரிதான் என்றபடி கண்ணாயிரத்திடம் விசாரணையை தொடங்கினார். கண்ணாயிரம் அந்த பொண்ணு கவுசல்யாவுக்கு எந்த ஊரு என்றுகேட்டார். கண்ணாயிரம்., அதுவா விழுப்புரம் என்றார். சரி, அந்தபொண்ணுக்கு விழுப்புரம் உனக்கு புதுவை. நீஅடிக்கடிவிழுப்புரம் போவியா என்று கேட்டார். கண்ணாயிரம், ஆ.. அடிக்கடி போகலை. கல்யாணத்தப்போ போனேன், அப்புறம் இந்த பையன்பிறந்தப்போ போனேன், அதுக்கு அப்புறம் ஆறுமாசத்துக்கு அப்புறம் போனேன். அவ்வளவுதான். என்று சொன்னார்.
அதை கேட்டதும் அருவாஅமாவாசை பற்களை கடித்தபடி, மூணு தடவைவிழுப்புரம் போனே. அப்படித்தானே.பிறகு எதுக்கு இந்த பையன்பிறக்க நீதான் காரணமுன்னு ஏன்சொல்லுற. என்று கேட்டார்.
கண்ணாயிரம் உடனே இந்தபையன் பிறக்க நான்தான்காரணம் என்று என் நண்பன் சொன்னான். அதனால நானும் சொல்லுறேன் என்றார்.
அருவா அமாவாசை கண்கள்சிவந்தது. உன்நண்பன் சொன்னான்னா.. நீயும் சொல்லுறதா. உன் நண்பன் ஏன் அப்படி சொன்னான். உன்னை மாட்டிவிடுறதுக்காக அவன் அப்படிசொல்லியிருப்பான். அவன் கெட்டவன் என்று கொதித்தார்.
அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு கோபம்வந்தது. என் நண்பனை எப்படி கெட்டவனுன்னு செல்லலாம். அந்த கருத்தை நீங்க வாபஸ்வாங்கணும். பஞ்சாயத்தில் இல்லாத ஒருவர்மீது அபாண்டமான குற்றச்சாட்டை கூறக்கூடாது. என்நண்பனைபற்றிய கருத்தை நீங்க வாபஸ்வாங்கலன்னா நான் பஞ்சாயத்திலிருந்து வெளிநடப்பு பண்ணிடுவேன் என்றார்.
உடனே அருவா அமாவாசை, என்ன அரசியல்வாதி மாதிரிபேசுற. இதை எங்கே படிச்ச என்று அதட்டினார்.
கண்ணாயிரம் பதிலுக்கு என்நண்பன்தான் எனக்கு அரசியல் சொல்லி கொடுத்தான். உள்ளாட்சி தேர்தல்வந்தால் நான் தேர்தலில் நிற்பேன். என்றார்.
அருவாஅமாசைக்கு தலை சுற்றியது. ஏய். இருக்கிற பிரச்சினை பத்தாதா, இதிலேவேற தேர்தலிலே நிக்கபோறீயா. ஊரு தாங்காதுடா என்றார்.
அதை கேட்டதும் முதியவர், ஏங்க அதுதேர்தல் வரும்போதுபார்த்துக்குவோம். முதலில் இந்த சின்னபையன் பிறந்ததற்கு யார்காரணம் அதை முடிவுபண்ணுங்க என்றார்.
அருவா அமாசை, மெல்லியகுரலில், கண்ணாயிரம், உன் நண்பனைபற்றி சொன்னகருத்தை வாபஸ்வாங்கிக்கிறேன். கோபப்படாதே. இந்த சின்னபையன் பிறக்க நீதான்காரணமுன்னு உன்நண்பன் ஏன் சொன்னான். அதை சொல்லு என்றார்.
கண்ணாயிரம் மெல்ல அப்படிகேளுங்க. என் நண்பனுக்கு திருமணமாகி பலவருஷமா குழந்தை இல்லாம இருந்துச்சு. அவன் அடிக்கடி புதுவைக்குவருவான். ஒருவருஷத்துக்குமுன்னால ஒருநாள் அவன் புதுவை வந்தபோது தனக்கு தனக்கு குழந்தை இல்லை என்றுவருத்தப்பட்டான். தனக்கு முருகன்போல் அழகான குழந்தைபிறக்கணும். அது நடக்குமா என்று கேட்டான். நான் அவனிடம் முருகன்மாதிரி குழந்தைபிறக்கணுமா.அப்படின்னா முருகன்கோவிலுக்கு வாரம்தோறும் செவ்வாய்கிழமை போயி சாமிகும்பிடுன்னு சொன்னேன். அவனும் மனைவியுடன் முருகன் கோவிலுக்குப்போயி சாமிகும்பிட்டான்.அவன் மனைவி கர்ப்பமானாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க நான் போன போது என் நண்பன் என்கையை பிடித்துகொண்டு, கண்ணாயிரம் இந்தபையன் பிறக்க நீதான் காரணம். நீமுருகன் கோவிலுக்கு போகச்சொன்னதால் நான் போனேன். எனக்கு முருகன்போல் அழகான மகன்கிடைத்தான். என்று சொன்னான். அங்கேவந்தவர்களிடமும் இதை சொன்னான். எனக்கேவெட்கமாபோச்சு.அப்படிசொல்லாதடா. என்றேன். அடபோடா எப்பவும் நான் இதை சொல்வேன். நீயும்சொல்லுன்னு சொன்னான். நானும் சொல்லுறேன் என்று கண்ணாயிரம் சொல்லி முடித்தார்.
அங்கிருந்தவர்கள் நம்பமுடியாமல் உதட்டை பிதுக்கினார்கள். முதியவர், கண்ணாயிரம் நீசொல்லுறதை எப்படி நம்புவது. உன்நண்பனுக்கு குழந்தைபிறக்க முருகன் கோவிலுக்குபோகச் சொன்னீயே. உனக்கு குழந்தை இல்லையே. நீமுருகன் கோவிலுக்குபோயிருக்கலாமே என்றுகேட்டார்.
கண்ணாயிரம் அப்பாவியாக, என்னைபார்த்து யாரும் கோவிலுக்கு போகசொல்லவில்லை, ஆஸ்பத்திரிக்குதான் போகச்சொன்னாங்க. கோவிலுக்கு போகச்சொன்னாதான போகமுடியும். நீங்க சொல்லுங்க. நான் போறேன். என்றார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் என்னசொல்வது என்று தெரியாமல் விழித்தனர்.
வே.தபசுகுமார், புதுவை