கடையத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
1 min readADMK celebrated with bursting of firecrackers at the shop
24.2.2023
தென்காசி தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. கொண்டாட்டம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.இதையடுத்து பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் கண்ணன், சுவாமிதாஸ், சத்யராஜ், சுதாகர், யோசப்பு, தங்ககுமார், மணி ராமச்சந்திரன், ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம் பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரகலா, ஒன்றிய பாசறை செயலாளர் வக்கீல் தமிழ் மணியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சவுந்தரராஜன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த தர்மர், தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், கிளைக் செயலாளர்கள் செல்வராஜ், புளி.கணேசன், சிம்சோன் தேவதாசன், நாராயணன் , செல்வன், முருகேசன், சங்கர், முருகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.