பதனீரில் சுண்ணாம்பா..அதிர்ந்த கண்ணாயிரம்/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்
1 min readCalcium in Padaneer..Kannayiram Surprise / Comic Story/ Tabasukumar
3.6.2023
கண்ணாயிரம் குற்றாலத்திலிருந்து பாபநாசத்துக்கு சுற்றுலாபஸ்சில் புறப்பட்டார். வழியில் தென்காசி சாலையில் குற்றாலம் விலக்கில் பதனீர் விற்பதைபார்த்த கண்ணாயிரம் பதனீர் பதனீர் என்று கத்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது கண்ணாயிரம் அவரது மனைவி பூங்கொடி மற்றும் சுடிதார்சுதா இளைஞர்கள் இறங்கி பதனீர் குடித்தார்கள். கண்ணாயிரம் பதனீரை பட்டையில் ஊற்றிக் குடித்தபோது எறும்பு கிடந்ததால் ஊதி ஊதி குடிக்க முயல..கண்ணை மூடிக்கொண்டு குடிங்க என்று பூங்கொடி கத்த கண்ணாயிரம் கண்களை மூடிக்கொண்டு பதனீரை குடிக்க ஒரு எறும்பு வாயில்மாட்டிக்கொண்டது.அதை கண்ணாயிரம் கீழே துப்பிவிட்டு..என்ன நான் சுத்தமான பதனீர்தானே கேட்டேன்..இப்படி எறும்பெல்லாம் கிடக்கு என்று கண்ணாயிரம் பதனீர் விற்ற இளைஞரை திட்ட அவரோ…இது சுத்தமான பதனீர்தான்.. எறும்பு தேனீர் கிடந்துச்சுல்லா என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம்..என்ன நீங்க..பாண்டிச்சேரியிலே பதனீர்குடிச்சிருக்கேன்.. கடல் தண்ணிமாதிரி இருக்கும்.. ஒரு ஈ எறும்புகூட கிடக்காது தெரியுமா.. இங்கே எறும்பெல்லாம் கிடக்குது.. உதட்டை கடிச்சா என்ன ஆவது..என்று எகிற அந்த இளைஞரோ.. அடே..அந்த எறும்பு கடிக்காது. இங்கே தேனீ எறும்பு கிடந்தாத்தான் நல்லபதனீன்னு நம்புவாங்க என்றார்.
உடனே கண்ணாயிரம் பதனீரில் கிடக்கும் எறும்பு கடிக்காதுன்னு எப்படி தெரியும்..என்று கேட்க அந்த இளைஞர் அந்த எறும்பு உயிரோட இருக்காது.. என்று சொல்ல அப்படின்னா, அது செத்த எறும்பா…கட்டெறும்புன்னால்லா சொன்னாங்க.. நான் பதனீர் குடிச்சிட்டேனே என்ன ஆகுமோ என்று பதட்டப்பட்டார்.
அதற்கு அந்த வாலிபர் ஒண்ணும் ஆகாது..நுங்கு சாப்பிடுங்க சரியாகிடும் என்றார்.
அப்படியா..நுங்கில் அவ்வளவு சக்தி இருக்கா.. கொடுங்க…கொடுங்க என்று கண்ணாயிரம் கேட்க அந்த வாலிபர் நுங்கை சீவி கொடுத்தார்.
அதை வாங்கிய கண்ணாயிரம் அதை எப்படிசாப்பிடுவது என்று விழிக்க.. அதைப்பார்த்த சுடிதார்சுதா..விரலைவைத்து குத்தி நுங்கை எடுங்க என்று சொல்ல கண்ணாயிரம் பெருவிரலை வைத்து நுங்கை குத்த.. அதிலிருந்து நுங்கு தண்ணீர் பீறிட்டு கண்ணாயிரம் முகத்தில் அடித்தது.
ஆ..கண்ணாயிரம் முகம் இனி அழகா பளிச்சின்னு தெரியும்..என்று சுடிதார் சுதா கிண்டலடிக்க பூங்கொடி ஓடிவந்து கண்ணாயிரம் முகத்தை துண்டால் துடைத்தார்.. ஏம்பா.. அந்த நுங்கை வெட்டிக்கொடு…என்று நுங்கு கொடுத்த இளைஞரை பூங்கொடி விரட்ட அவர் நுங்கை வெட்டி கண்ணாயிரம் கையில் கொடுத்தார்.
பின்னர் கண்ணாயிரம் அதை எடுத்து ரசித்து ரசித்து சாப்பிட்டார். ஆ..நுங்கு நல்லா இருக்கே.. என்று பாராட்ட நுங்கு விற்ற இளைஞர் பனைமரத்தின் புகழை விவரித்தார்.
பனைமரம் சாதாரணமானது அல்ல.. கற்பக விருச்சம். அதன் அனைத்து பகுதியும் மக்களுக்கு பயன்படும். பனைமரம் பதனீர் கொடுக்கும்.. அதிலிருந்து கருப்பட்டி தயாரிக்கலாம் என்றார்.
கண்ணாயிரத்துக்கு ஒரு சின்ன சந்தேகம் வந்தது. ஏம்பா..பதனீர் இனிச்சுது.. ஆனா கொஞ்சம் சுண்ணாம்பா இருந்துச்சேப்பா..ஏன் பதனீர் நுரைவரணுமுன்னு யாருக்கும் தெரியாம சுண்ணாம்பை போடுவீங்களா..என்று கேட்க.. அந்த இளைஞருக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஏங்க..சுண்ணாம்பை தெரியாம போடல..தெரிஞ்சுதான் போடுறோம்..சுண்ணாம்பு போடலைன்னா..அது கள்ளுங்க.. அது போதைங்க..அதை விற்றா தப்பு என்றார்.
அதைக்கேட்ட கண்ணாயிரம் என்னங்க.. கலப்படம் பண்ணிவிற்றா நல்லதுங்கிறீங்க.. கலப்படம் பண்ணாம விற்றா தப்புறீங்க..எங்கே பாண்டிச்சேரியிலே கலப்படம் இல்லாம கள்ளு விக்கும். விருப்பப்பட்டவங்க குடிப்பாங்க..யாரும் செத்ததில்லை..தெரியுமா என்க… கண்ணாயிரத்தின் அறிவு திறனை பார்த்து எல்லோரும் கன்னத்தில் விரல்வைத்தார்கள்
சரி..சரி..சீக்கிரம் நுங்கு தின்னுட்டு கிழம்புங்க…கள்ளுக்கு ஆதரவா பேசுனா உங்களை பிடிச்சிட்டு போயிடுவாங்க..போங்க..போங்க..என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரமும்..அதுவம் சரிதான் என்றபடி கிளம்பினார். பூங்கொடி பதனீர் மற்றும் நுங்குக்கு காசுகொடுத்துவிட்டு புறப்பட்டார்.
கண்ணாயிரத்தைப்பார்த்து இனி நொங்கு வேணுமுன்னு கேட்டிங்கன்னா நொங்கு நொங்குன்னு அடிச்சிருவேன். ..பாருங்க முகத்திலே இன்னும் நொங்கு வடியுது ..பால்வடியும் முகமுன்னு சொல்வாங்க ..இது நுங்குவடியும் முகம் . என்றார்
சரி நொங்கு கேட்டால் நொங்கு நொங்குன்னு அடிப்பே. பதனீர் கேட்டால் எப்படி அடிப்பே என்று கண்ணாயிரம் கேட்க பளீரென்று அடிப்பேன் என்று பூங்கொடி சொல்ல. ..கண்ணாயிரம் ..நீ அடிச்சாலும் அடிப்பே என்றார் .
பின்னர் கண்ணாயிரம் மெல்ல .பூங்கொடியிடம் இந்த சொத்து சொத்துன்னு அடிச்சான்னு சொல்வாங்களே. அது எப்படி என்று பூங்கொடியிடம் கேட்க. .அவர் கோபமாக. ..சொத்து கேட்டு கொடுக்கட்டா. சொத்து சொத்துன்னு அடிப்பாங்க என்று சொல்ல. ..கண்ணாயிரம் அப்படியா. இப்போதான் புரியுது. என்று சொன்னார் .
அதுசரி…சொத்து கேட்டு அடிச்சா சொத்து சொத்துன்னு அடிச்சான்னு சொல்லுறீங்க. ஆனா கத்தியால குத்தினா. ..சதக் சதக்குன்னு குத்துனான்னு ஏன் சொல்கிறாங்க என்று கண்ணாயிரம் கேட்க.. அதுவா சதையிலே குத்துறதாலே அப்படி சொல்லியிருக்கலாம் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் சிரித்தார்
ம்..எப்படியெல்லாம்..இருக்கு பாரு..என் நண்பன் ஒருவன் சரக்கு சரக்குன்னு போயிட்டு மருந்து கடையிலே மருந்துவாங்கிட்டுவான்னு ஒருநாள் சொன்னான் .நானும் சரக்கு சரக்குன்னு நடந்து போயி சரக்குவாங்கி கொடுத்தேன்.அவன் மருந்துன்னு சொல்லுறது மதுதான் என்று சொல்ல..இந்த வேலை எப்போ பார்த்தீங்கன்னு பூங்கொடி கண்ணாயிரத்தைவிரட்ட..அவர் துள்ளிக்குதித்து ஓடினார்.
(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.