May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை தூங்க விடாத பாடி/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Kannairam Partha Padi/ Comedy story/ Tabasukumar

26.12.2023
கண்ணாயிரம் பாளையங்கோட்டையிலிருந்து மனைவி பூங்கொடியுடன் வாடகை காரில் புதுவை புறப்பட்டார். வழியில் திருச்சி அருகே பிளாட்பார கடையில் தோசை சாப்பிட்டுவிட்டு காரில் ஏறினார். காரை டிரைவர் மெதுவாக ஓட்டியதால் இருட்டானதால் பயமா இருக்கா.. நான் இருக்கேன் பயப்படாதீங்க.. என்று கண்ணாயிரம் சொல்ல டிரைவரோ.. நானா பயப்புடுறேனா.. ஒரு பாடியையே காரில் ஏத்தி போயிருக்கேன் என்க கண்ணாயிரம் பயந்து நடுங்கினார்.
தான் இருக்கும் இருக்கையில்தான் பாடி இருந்தது என்று தெரிந்ததால் இருக்கையிலிருந்து எழுந்து கீழே அமர்ந்து கொண்டார்.
கார் டிரைவர் லைட்டை அணைத்ததால் அச்சத்தில் ஆ என்று கண்ணாயிரம் அலறினார்.
உடனே டிரைவர் லைட்டை போட கண்ணாயிரம் ஏங்க லைட்டை அணைக்காதீங்க.. எனக்கு பயமா இருக்கில்லா என்றார்.
சரி.. சரி.. என்றபடி டிரைவர் காரை வேகமாக ஓட்டினார்.கண்ணாயிரம்..பூங்கொடியிடம்.. போர்வையை எடு.. நான் விரிச்சி படுத்துக்கிடுறேன் என்க.. பூங்கொடி..ம் சத்தம் காட்டாம படுத்துக்கிடணும் சரியா என்றார்.
கண்ணாயிரம் ம் என்று தலையை ஆட்ட பூங்கொடி பெட்டியைத் திறந்து உள்ளே உள்ள துணிகளை உருட்டி போர்வையை எடுத்தார்.
கண்ணாயிரம்..ம் போர்வையை எடுக்க எவ்வளவு நேரமா என்று சத்தம் போட பூங்கொடி ..ம் பொறுமை இருக்காதே.. இந்தா பிடிங்க.. போர்வையை.. துணிகளை புரட்டி எடுக்க நேரமாயிட்டு..எது எது எங்கே இருக்குன்னு தெரியலை.. கார் வேற வேகமாக போகுது.. என்ன செய்யுறது.. துணியை அமுக்கி பெட்டியைக் கூட சரியா மூட முடியல என்று கோபப்பட்டார்.
கண்ணாயிரம் ம்.. கோபப்படாதே.. பெட்டியை மூடி அங்கே வை எனக்கு தூக்கம் வருது என்றபடி போர்வையை விரித்துப் படுத்தார். லைட்டை அணையாதீங்க.. ஆமா சொல்லிப்புட்டேன் என்றபடி கண்ணாயிரம் கண்களை மெல்ல மூடினார்.
கார் பள்ளம், மேட்டில் ஏறி இறங்கிய போது கண்ணாயிரம் காருக்குள்ளே உருண்டு புரண்டார்.
கார் மின்னல் வேகத்தில் சென்றது. தான் இருந்த இருக்கையிலே பாடி எதுவும் தெரிகிறதா என்று அவ்வப்போது கண்ணாயிரம் விழித்துப் பார்த்துக்கொண்டே வந்தார்.
கார் மின்னல் வேகத்தில் சென்றது. பூங்கொடி..ஏங்க..பயப்படாம தூங்குங்க.. பாடி எதுவும் தெரியலையலியே என்று கேட்டார். கண்ணாயிரம் இல்லை என்று தலையை ஆட்டினார்.
சரி..தெரிஞ்சா சொல்லுங்க..அடிச்சிருவோம் சரியா என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் ம்..என்றபடி கண்களை மெல்ல மூடினார்.
கார் டிரைவர் சிரித்தபடியே ஓட்டிச்சென்றார். போரடித்ததால்..பாடலை ஒலிக்கச் செய்தார். ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டேன்.. ஊ..ஊ..ஊ.. என்று பாடல் தொடர்ந்தது.
அதைக் கேட்ட கண்ணாயிரம்..என்ன சின்னப்புள்ளைத்தனமா இருக்கு.. நானே பாடிக்கு பயந்துகிடக்கேன்.. நீங்க பேய் பாட்டு போடீறிய.. நிறுத்துங்க.. என்று சத்தம் போட டிரைவரும் பயந்துபோய் பாட்டை நிறுத்தினார்.

ம்..ஏன் கத்துறீய..பாடி தெரிஞ்சா என்னிடம் சொல்லுங்கன்னு சொல்லியிருக்கேன்ல.. உங்க கைத்தடியை வச்சி அடிச்சிருவோம் சரியா என்க கண்ணாயிரமோ.. என் கைத்தடி வேண்டாம்.. பேயி பிடுங்கிட்டுப் போயிட்டுன்னா என்ன பண்ணுறது.. அதை எங்கே போய் தேடி கைத்தடியை வாங்க முடியும்.. அதனால பேய் வந்தா சத்தம் போட்டு அனுப்பிடுவம்.. என்றார் கண்ணாயிரம்.
பூங்கொடியும்..சரி..குப்புறப் படுங்க..எதுவும் தெரியாது.. என்று சொல்ல கண்ணாயிரமும் ஆ..நல்ல ஐடியாதான்..என்றபடி குப்புறப்படுத்தார்.
ஓரக்கண்ணால் பாடி தெரியுதா என்று பார்த்துவிட்டு துங்கினார். குறட்டை சத்தம் கார் சத்தத்தை மிஞ்சியது. ஒரு திருப்பத்தில் கார் வேகமாக திரும்பிய போது.. இருக்கையில் இருந்த பெட்டி உருண்டு கீழே படுத்திருந்த கண்ணாயிரம் முதுகில் விழுந்தது. கண்ணாயிரம் அய்யோ அம்மா..பெட்டியை பாடி தள்ளிவிட்டுட்டு.. என்னை கொல்லப்பாக்குது என்று கத்தினார்.
பூங்கொடி கோபத்தில்.. ஏங்க..கார் திரும்பினதால பெட்டி விழுந்துட்டு.. இதுக்குப் போய் பாடி பாடின்னு சத்தம் போடுறீய என்று சொல்ல கண்ணாயிரமோ.. பூங்கொடி, பாடி இருந்த இருக்கையிலே பெட்டியை வைக்காதே.. உருட்டி விட்டுடும்.. பெட்டியை தூக்கி உன் மடியிலே வச்சிக்க..என்றார்.
பூங்கொடியும்..ம். உங்களோடு ஒரே அக்கப் போரா போச்சு.. சரி.. நான் மடிமேல பெட்டியை வச்சிக்கிடுறேன் என்றவாறு பெட்டியை தூக்கி தன் மடியிலே வைத்தார். ம்..குப்புறப்படுத்து தூங்குங்க என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரமோ.. குப்புறப்படுத்தா..பேயி வர்றது தெரியாம போயிடும். அது என் முதுகில் அடிச்சா நான் என்ன பண்ண முடியும்.. நான் திரும்புறதுக்குள்ளே பேயி ஓடிடுமே என்றார்.
சரி, திரும்பி படுங்க, ஆனா பாடியை பாத்தா என்னிடம் சொலுலுங்க.. கத்தாதீங்க.. நீங்க கத்துறதாலே எனக்கே பயமா இருக்கு..என்றார்.
உடனை கண்ணாயிரம்..ம். எந்த பாடியைப் பார்த்தாலும் கத்தக்கூடாதா.. உன்னிடம் சொன்னா போதுமா என்று கேட்க.. பூங்கொடி..ம் என்றார்.
கார் பறந்து சென்றது. மணி நள்ளிரவு பன்னிரெண்டை நெருங்கியது. கண்ணாயிரம்.. பூங்கொடியிடம்.. மணி என்ன என்று கேட்க.. பூங்கொடியோ. அது எதுவும் இருந்துட்டுப் போகட்டும். தூங்குங்க என்க.. கண்ணாயிரம் இல்லை மல்லிகை பூ வாடை அடிக்குது.. அதான் கேட்டேன் என்றார்.
பூங்கொடி.. மல்லிகை பூன்னா வாடை அடிக்கத்தான் செய்யும்.. அதுக்காக.. பேய் வருதுன்னு அர்த்தமா.. அய்யய்யே என்று பற்களை கடித்தார்.
கண்ணாயிரம்.. மல்லிகை பூவாடை எங்கிருந்து வருது என்று கேட்க.. பெட்டிக்குள்ளிருந்துதான் வருது….போதுமா ஏற்கனவே வைச்ச மல்லிகை பூ.. போர்வையை எடுக்கும்போது மேலே வந்துட்டு என்று சொன்னார்.
அதை ஏன் புரட்டிவிட்ட.. மல்லிகை வாசம் பயமா இருக்குல்ல.. என்று கண்ணாயிரம் சொல்ல.. பேசாம.. இருங்க.. கண்டதுக்கெல்லாம் பயப்படாதீங்க.. கையை பிடிச்சிக்கிட்டே தூங்குங்க என்றார்.
கண்ணாயிரம்..சரி என்றபடி தூங்கினார்.
கார் பறந்து சென்றது. ஒரு மணி ஆன போது கண்ணாயிரம் கண் திறந்து பார்த்தார். லைட்டு அணைக்கப்பட்டிருந்தது. இருக்கையைப் பார்த்தார். பின்னர் பூங்கொடி மடியில் வைத்திருந்த பெட்டியைப் பார்த்தார். ஏதோ தொங்குவது போல் தெரிந்தது. இருட்டில் சரியாக தெரியவில்லை. அவ்வளவுதான்..பெட்டியிலே சின்னதா பாடி தொங்குது என்று நினைத்தவர்..ஆ..என்று அலறினார்.
டிரைவரும் காரை நிறுத்தினார். பூங்கொடி என்ன..என்ன என்று கேட்க..பாடி.. தொங்குது.. பாடி தொங்குது.. என்று கண்ணாயிரம் கத்த எங்கே எங்கே என்று பூங்கொடி கேட்க கண்ணாயிரம் பூங்கொடி வைத்திருந்த பெட்டியை நோக்கி கையை நீட்டினார்.
இங்கே எங்கே பாடி தொங்குது என்றபடி பூங்கொடி சுற்றிப் பார்த்தார். ஒண்ணும் இல்லைங்க என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் லைட்டை போடு..போடு.. என்று கத்த டிரைவர் லைட்டை போட்டார். லைட்டு எரிந்தது.
கண்ணாயிரம்..பூங்கொடியின் பெட்டியை நோக்கி கைகாட்டிவிட்டு திரும்பிக்கொண்டார். பூங்கொடி.என்னது என்றபடி பெட்டியைப் பார்க்க.. அங்கே பூங்கொடியின் உள்பாடி பெட்டிக்குள்ளிருந்து பிதுங்கி பாதி தொங்கியவாறு ஆடிக்கொண்டிருந்தது.
உடனே கண்ணாயிரம் தலையில் ஓங்கி ஒரு குட்டுவைத்தார் பூங்கொடி.(தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.