May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்துக்கு மறுமணமா/ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Remarriage for Kannayiram / comedy story / Tabasukumar

12.1.2024
பாளைங்கோட்டையிலிருந்து புதுவை வந்த கண்ணாயிரம் தூங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் இறந்து விட்டதாக இதய அஞ்சலி போஸ்டர் ஒட்டியிருந்ததால் அஞ்சலி செலுத்த நண்பர்களும் பொதுமக்களும் மாலைகள் மற்றும் மலர்வளையங்களுடன் கண்ணாயிரம் வீட்டுக்கு வந்தனர்.
இதை அறிந்த கண்ணாயிரம் மனைவி பூங்கொடி உஷாராகி கண்ணாயிரத்தை எழுப்பி குளித்துவிட்டுவாருங்கள். நான் சொன்னபிறகு வெளியே வாருங்கள் என்று அனுப்ப கண்ணாயிரம் பாத்ரூமூக்கு சென்று யாரை நம்பி நான் புறந்தேன். போங்கடா போங்க என்று பாட்டுப்பாடி குளித்துக்கொண்டிருந்தார்.
கண்ணாயிர் வீட்டை விட்டு சென்றவர்கள் கடை வீதிக்குச் சென்றனர். பூங்கொடியின் தந்தை அருவா அமாவாசைக்கு போனில் தகவல் தெரிவித்தனர். கண்ணாயிரம் விபத்தில் மறைந்துவிட்டார். பாடியும் மறைந்துவிட்டது.
பூங்கொடியிடம் கேட்டால் டிரங்பெட்டியில் பாடியிருக்கு என்கிறாள். அவருக்கு புத்திபேதலித்துவிட்டது என்று சொல்ல.. எவன்டா என் மகளைப் பற்றி குறை சொல்லுறது என்று அருவா அமாவாசை எகிறினார்.
அது இல்லங்க..கண்ணாயிரம் மறைந்து விட்டார் என்று அவர்கள் சொல்ல ஏதாவது கடன் கொடுக்கணுமா.. அவர் எங்கேயாவது ஒளிஞ்சிக்கிட்டு இருப்பாரு நல்லாத் தேடிப்பாருங்க என்று அருவா அமாவாசை சொன்னார்.
உடனே அவர்கள்
. அது இல்லங்க.. கண்ணாயிரம் தவறிட்டாரு என்று சொல்ல.. அருவா அமாவாசையோ.. என்னங்க.. மாதம் மாதம் கட்டவேண்டிய தவணையை கட்டத் தவறிட்டாரா.. என்று கேட்க அவர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டார்கள்.
எப்படி அவரிடம். உண்மையைச் சொல்வது டப்புன்னு சொன்னா அவர் டிப்புன்னு போயிட்டா
என்னப் பண்ணுறது என்று யோசித்தார்கள்.
பின்னர்..கண்ணாயிரம் மர்கயா என்று சொல்ல.. அருவா அமாவாசை பதட்டமானார். என்ன சொன்னா..என்று அலற.. அவர்கள் ஆ.. அவருக்கு உண்மை புரிஞ்சிட்டு என்று நினைத்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
என்ன பண்ணுறது.. கண்ணாயிரம் மர்கயா.. மனதை தேத்திக்கிட்டு மாலையோடு வாங்க என்றனர்.
அருவா அமாவாசை ஆவேசமானார்.. என்னடா சொல்லுறீங்க.. என் மகளுக்கு குழந்தை இல்லைதான். அதுக்காக கண்ணாயிரம் மறு கல்யாணம் பண்ணிக்கிடுவானா.. என்ன தைரியம் அவனுக்கு என்று அவர் தவறாகப் புரிந்து கொண்டு கோபப்பட அவர்கள் திணறினார்கள்.
என்னடா வம்பாப் போச்சு ..என்று நினைத்தவர்கள்.. இறந்தார் என்பதை இந்தியில் சொன்னது விபரீதமாப் போச்சு.. என்னப் பண்ணுறது என்று திண்டாடினார்கள்.
பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. அது வந்துங்க.. நீங்க தப்பா நினைக்காதீங்க.. மாலையோடு வந்தாப் போதும் என்று அவர்கள் சொல்ல.. என்ன தப்பா நினைக்கக் கூடாது.. அவன் மறுமணம் செய்ய நான் மாலையோடு வரணுமா..அருவாவோடு வர்ரேன்..இரண்டில் ஒண்ணு பார்க்காம போகமாட்டேன். செலவு பண்ணி குற்றாலத்துக்கு ஜோடியா அனுப்புனா..அவன் மறுமணம் செய்யப் பாக்கானா.. நீங்கதான்..அவனுக்கு சப்போர்ட்டா என்று அருவா அமாவாசை அடுக்கிக்கொண்டே போனார்

உடனே ஒருவர் ..கண்ணாயிரம் செத்தான்னு என்று சொல்ல.. அருவா அமாவாசை.. ஆமாய்யா.. நான் அங்கே வந்தா கண்ணாயிரம் செத்தான். அவனை உயிருடன் விடமாட்டேன் என்று அருவா அமாவாசை கொக்கரித்தார்.
அவர்களுக்கு வியர்த்தது. அவருக்கு எப்படி புரியவைக்கிறது.. நாம ஒண்ணு சொன்னா..அவர் ஒண்ணு நினைக்கிறாரே என்று புலம்பினார்கள். எப்படியும் சொல்லிடணுமுன்னு நினைத்த அவர்கள்.. உங்க மகா.. அதை மறைக்கிறாங்க.. கண்ணாயிரம் எங்கேன்னு கேட்டா குளிக்கிறார் .. என்கிறாங்க என்று சொல்ல.. அருவா அமாவாசை.. டென்சனாகி.. என் மகளுக்கு அது தெரியாம இருக்கலாம்.. கண்ணாயிரம் காலையிலே குளிக்கிறானா.. மறுமணத்துக்கு ரெடியாகிறானா.. ரகசிய திருமணமா.. இல்லை மேளதாளம் கொட்டியா.. என்னிடம் சொல்லிட்டியல்ல.. அருவாளோட உடனே வர்ரேன்.. போனை கட்பண்ணுங்க என்று அருவா அமாவாசை சொல்ல அவர்கள் விழிபிதுங்கினார்கள்.
இப்போ அருவாளோடு புறப்பட்டு வந்திடுவாரே.. சிக்கல் மேலே சிக்கலப்பா.. என்று குழம்பினார்கள்.
-வே.நபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.