May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக ஏ.கே .கமல் கிஷோர் பொறுப்பேற்பு

1 min read

AK Kamal Kishore took charge as Tenkasi district administration chief

31.1.2024
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட ஏகே கமல் கிஷோர் நேற்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் மாநிலத்தைச் சேர்ந்தவர் 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரி மற்றும் பப்ளிக் மேனேஜ்மென்ட் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார் திருச்சி மாவட்டம் மற்றும் நாகை மாவட்டத்தில் சப் கலெக்டர் ஆகவும் திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் கலெக்டராகவும், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்று கொண்ட ஏ.கே.கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது அவர் கூறியதாவது ;-

தென்காசி மாவட்டத்திற்கு என்னை மாவட்ட ஆட்சியராக நியமித்ததற்கு தமிழக முதலமைச்சர் திரு. மு. க ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய வர்கள் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

மேலும் தென்காசி மாவட்ட பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக முழு முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் அதற்கு தேவையான முழு நடவடிக்கைகளும் எடுப்பேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.