June 28, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்-அமைச்சர்கள் பங்கேற்பு

1 min read

Nellaiyappar Temple Aani Chariot Procession.

28.6.2026
தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயமான நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வான 520-வது திருத் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் மதன்ராஜா உடன் இணைந்து வடம் பிடித்து தேரை இழுத்து விழாவை சிறப்பித்தனர்.

ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட 450 டன் பிரம்மாண்ட தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘நமசிவாய’ ‘சிவாய நம’ என்ற கோஷங்களை முழங்கி உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினர். பின்னர் தேர் புறப்பட்டது. சாமி தேரைத் தொடர்ந்து அம்மன் தேரும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.

கடந்த ஜூன் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆனிப் பெருந்திருவிழா இன்றுடன் உச்சக்கட்டத்தை எட்டியது. திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. மாதம் தோறும் விழாக்கள் நடைபெறும் நெல்லையப்பர் கோயில், குறிப்பாக ஆனித் திருவிழாவுக்கு புகழ் பெற்றது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினசரி காலை மாலை வேளைகளில் சுவாமி அம்மாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தனர்.

தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. நெல்லை மாநகர் உள்பட பல மாவட்டங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்று கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தேரை இழுத்து, சுவாமி தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சியைப் பெற்றனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர். நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் தமிழக இந்து பக்தர்களின் ஒற்றுமை மற்றும் பக்தியின் அடையாளமாக திகழ்ந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *