தொகுப்பாளினி அனிதாவிடம் எல்லை மீறும் ரசிகர்கள்
1 min read9.3.2020
சமூக வலைதளங்களில் பிரபல நடிகர் நடிகைகளின் பெயரில் போலி கணக்குகள் துவங்கி சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவுகளை பல நெட்டிசன்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். ஏன் சமீபத்தில் தல அஜித்தின் கையெழுத்தை போலித்தனமாக போட்டு அறிக்கை வெளியிட்டது கூட அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் சமீபத்தில் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் திரௌபதி. 50 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரௌபதி படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகை, பிரபல தொகுப்பாளினி அனிதா சம்பத் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி திரௌபதி படத்திற்கு அனிதா சாதிரீதியாக சப்போர்ட் செய்வதைப்போல பொய்யான தகவலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா உடனடியாக அதற்கு ரிப்ளை பண்ணி விட்டார். அவர் கூறியதாவது, இது ஒரு பொய்யான அக்கவுண்ட் எனவும் இதற்கு மேல் இதை பற்றி கூற எதுவுமில்லை எனவும் கூறியுள்ளார், மேலும் ஏதோ ஒரு கேவலவாதி இதுபோல் செய்து விட்டார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை அறிந்த நெட்டிசன்கள் அனிதாவுக்கு ஆதரவாக தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.