April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

திருமணம் செய்வதாக கூறி நடிகையிடம் பாலியல் பலாத்காரம்

1 min read

Actress raped for claiming to be married

1/12/2020

திருமணம் செய்வதாக கூறி டி.வி. நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ததாக காஸ்டிங் இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆயுஷ் திவாரி

மும்பையை சேர்ந்த 26 வயது டி.வி. நடிகை ஒருவர் மும்பை வெர்சோவா போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அந்த புகாரில், காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்வதாக கூறி கடந்த 2 ஆண்டுகளாக கற்பழித்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது அவர் தன்னை திருமணம் செய்ய மறுத்து விட்டதாகவும் புகாரில் கூறி இருந்தார்.

இதேபோல அவர் டி.வி. நடிகைக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த புகார் குறித்து போலீசார் காஸ்டிங் இயக்குனர் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கு குறித்து போலீசார் விரைவில் காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரியிடம் விசாரணை நடத்துவார்கள் என அதிகாரி ஒருவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.