டெலிவிஷன் நடிகை சித்ரா தற்கொலைதான் செய்தார்; பிரேத பரிசோதனையில் தகவல்
1 min readTelevision actress Chitra committed suicide; Autopsy information
10/11/2020
டெலிவிஷன் நடிகை சித்ரா தற்கொலைதான் செய்தார் என்று பிரேத பரிசோதனை தகவல் தெரிக்கிறது.
சித்ரா தற்கொலை
சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று( புதன்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அவர் தூக்கில் தொங்கினார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், சித்ராவின் தாயார் இன்று( வியாழக்கிழமை) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எனது மகளை ஹேம்நாத் அடித்து கொலை செய்திருக்கலாம். அவள தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை இல்லை. நல்ல தைரியமானவர்.
இவ்வாறு சித்ராவின் தாயார் கூறினார்.
சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை தான்
இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை) காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
சித்ரா தற்கொலை செய்தார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவரது தற்கொலைக்கு யார் காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள.