May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

fasting

1 min read
பாவத்தை போக்கும் கீரை விருந்து

26-12-2020 சனிக்கிழமை அன்று வரும் துவாதசி திதி மார்கசிர சுத்த துவாதசி என்று அழைக்கப்படும். இந்த திதியின் அதிதேவதையான விஷ்ணுவை வழிபட்டால் நல்லது. இன்று அகத்திக்கீரை மற்றும் சத்தான உணவு பொருட்களால் அக்கம்பக்கத்தாருக்கு விருந்து வைத்து அவர்களோடு சாப்பிடுவது மிக நல்லது. இதனால் விருந்து வைப்போரது எல்லா பாவங்களையும் போக்கும்.
இந்த துவாதசியை உல்கா துவாதசி என்றும் அழைப்பர். ஒருமுறை வாயு பகவான் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார். அப்போது அவரது வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு சங்கு, சக்கரம், கதை , தாரை ஏந்தி வைஜெயந்தி என்ற மாலை அணிந்து காட்சி கொடுத்தார். அப்படி காட்சி கொடுத்த நாள்தான் உல்கா துவாதசி. இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் வணங்கினால் உடல் குறைபாடு நோய்கள் குணம்அடையும். கண், காது, நோய்கள் மற்றும் தொழு நோய்கள் பூரண குணம் அடையும்.
இந்த துவாதசியை மத்ஸ்ய துவாதசி என்றும் கூறுவார்கள். இன்று மச்ச ரூபத்தில் மகாவிஷ்ணுவை வணங்கினால் எதையும் தாங்கும் மன வலிமை ஏற்படும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.