April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை – ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை

1 min read

Actress Chitra does not commit suicide due to dowry violence – RDO Investigation report

31.12.2020

சித்ரா தற்கொலை பற்றி விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சித்ரா

டெலிவிஷன் நடிகை சித்ரா, கடந்த 9&ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதனை அடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது வழக்குப் பதிவு அவரை கடந்த கடந்த 14-ந் தேதி கைது செய்தனர்.

இதுதவிர சித்ரா தற்கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ கடந்த 14&ந் தேதி விசாரணையை தொடங்கினார். அவர் முதலில் சித்ராவின் பெற்றோர், சகோதரர், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அதன்பின் ஹேம்நாத்திடமும், அவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினார்.

இவர்களைத் தவிர சித்ராவுடன் டெலிவிஷன் தொடரில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என 15 பேரிடம் விசாரணை நடத்தினார். இதனை அடுத்து ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ தனது விசாரணை அறிக்கையை பூந்தவல்லி உதவி ஆணையர் சுதர்சனத்திடம் ஒப்படைத்தார்.

வரதட்சணைஅறிக்கை

விசாரணை அறிக்கையில் சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என கூறப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.