பட தலைப்பு விவகாரத்தில் இயக்குனர் பாலாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ்
1 min readCourt notice to director Bala on film title issue
20/1/2021
பட தலைப்பு விவகாரத்தில் இயக்குனர் பாலாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
படத்தின் தலைப்பு
மலையாளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ஜோசப். இந்தப் படத்தை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் ரீ மேக் செய்கிறா£ர்கள்.
இந்தப்படத்தை ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் மூலம் இயக்குனர் பாலாவும், இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ¨ம் திரைப்படம் தயாரித்து வருகின்றனர். ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய எம்.பத்மகுமாரே விசித்திரன் படத்தையும் இயக்கியுள்ளார்.
வழக்கு
இந்த நிலையில் விசித்திரன் தலைப்புக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சி.எஸ்.கே. புரோடக்சன் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு விசித்திரன் என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் கில்டில் பதிவு செய்துள்ளார். அதை கடந்த மார்ச் மாதம் வரை புதுப்பித்து வந்துள்ளார்.
அவர் தனது ‘விசித்திரன்’ தலைப்பில் படத்தை தயாரிக்க தடைவிதிக்கக் கோரி சதீஷ்குமார் சென்னை 14-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு குறித்து ‘பி ஸ்டுடியோ’ நிறுவனத்தின் உரிமையாளரான இயக்குநர் பாலா மற்றும் இணை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை ஜனவரி 25-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.