பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் மரணம்
1 min readFamous Hindi actor Dilip Kumar dies
7/7/2021
பிரபல இந்தி நடிகர் திலீப்குமார் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திலீப்குமார்
பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் இந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவருக்கு 98 வயதானதால், வயது மூப்பின் காரணமாக இதுபோன்ற உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நிலை தேறிவருவதாக நேற்று அவரது மனைவி சாய்ரா பானு கூறியிருந்தார்.
மரணம்
இந்த நிலையில் இன்று (ஜூலை 7) காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி திலீப் குமார் காலமானார். திலீப் குமாரின் மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘மறைந்த நடிகர் திலீப் குமார் மறைவு என்பது ஒரு யுகத்தின் முடிவாகும். அவரை பற்றி சுருக்கமாக கூறினால் வளர்ந்து வரும் இந்தியாவின் வரலாறு’’ எனக் கூறியுள்ளார்.
மோடி இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘சினிமா உலகில் பல சாதனைகளை படைத்த திலீப் குமார் மறைவு கலை உலகத்திற்கு பேரிழப்பு” எனத்தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில் “திலீப் குமாரின் பங்களிப்பு இந்திய சினிமாவின் அடுத்த தலைமுறையினருக்கும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.