April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

மரணமடைந்த நடிகரின் கடனை அடைக்க நிதி திரட்டிய நடிகை

1 min read

The actress raised funds to pay off the deceased actor’s debts

6.9.2022
பிரபலமான தொலைகாட்சி நடிகரான தீபேஷ் பான் கடந்த ஆண்டு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்து போனார். அவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போனது. அவர் வீட்டுக்கடனாக பெற்றிருந்த 50 லட்சத்தைக் கட்ட முடியாமல் திணறி வந்தனர்.

இதனை அறிந்த தீபேசுடன் நடித்த சக நடிகையான கவுமியா தாண்டன் அவர்களது குடும்ப நிலை அறிந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார். தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக திரையுலகினரைத் தொடர்பு கொண்டு இந்த நிதி திரட்டும் வேலையில் ஈடுப்பட்டார். மனித நேயத்தோடு சிலர் அவரது முயற்சிக்கு கைக்கொடுக்க தங்கள் பெயர் வெளியில் தெரியாத வண்ணம் நிதியை கொடுத்து உதவி இருக்கிறார்கள். இதன் மூலம் 50 லட்சம் கடனை அடைத்து விட்டதாக தீபேஷ் பான் மனைவி நேஹா தெரிவித்திருக்கிறார். சவுமியா தாண்டனின் இந்த முயற்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.