April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

மச்சியில் மறைந்த கண்ணாயிரம்/நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Kannayiram disappeared in Macchi/comic story / Tabasukumar

30.1.2024
கண்ணாயிரம் விபத்தில் மறைந்ததாக வந்த தகவலால் அவரது நண்பர்கள் டிரம்ஸ் முழங்க கண்ணாயிரம் வீட்டுக்கு வந்தனர். இந்த வேளையில் கண்ணாயிரம் உயிரோடு இருப்பதாக அவரது மாமனார் அருவா அமாவாவாசை சொல்ல உள்ளூர் பத்திரிகையில் சுற்றுலா சென்ற புதுவை முதியவர் பலி என்று போஸ்டரில் போடப்பட்டிருப்பதை மோட்டார்சைக்கிள் வாலிபர் சொல்ல அருவாஅமாவாசைக்கும் தன் மருமகன் கண்ணாயிரம் மீது சந்தேகம் வந்துவிட்டது. நாம் காதை கடித்தோமே..ஒருவேளை கண்ணாயிரம் ஆவியைப் பார்த்தோமா என்று ஒரு கணம் சிந்தித்தவறுக்கு தலை சுற்றியது. ஆனாலும் கண்ணாயிரம் உயிரோடு இருப்பதை இரு கண்ணால் பார்த்தேன்.. வாங்க வீட்டில் போய் பார்ப்போம் என்று அருவாஅமாவாசை அழைத்தார்.
உடனே அவருடன் மோட்டார்சைக்கிள் வாலிபர் மற்றும் கண்ணாயிரம் நண்பர்கள் வந்தனர். அருவாஅமாவாசை அருவாளை சுழற்றியபடி நடந்து வந்தார். கண்ணாயிரம் வீட்டை நெருங்கியதும்..டிரம்ஸ் அடிப்பவர் டிரம்சை அடிக்க.. அருவாஅமாவாசை.. சு..சத்தம்..டிரம்ஸ் அடிக்காதீங்க.. கண்ணாயிரம் உஷாராகிவிடுவான்.. அப்படியே போய் அமுக்கணும் என்றார்.
அதன்படி எல்லோரும் பூனை போல் பதிவைத்து நடந்தார்கள்.
இந்த நேரத்தில் வீட்டுக்குள் கண்ணாயிரம்.. பூங்கொடியிடம்.. ஏன் உங்க அப்பாக்கிட்ட அருவாவைக் கொடுத்தே.. அருவா கையில் இருந்தாலே அவர் ஆடுவார்..வெளியே போனவர் திரும்பிவந்தா என்ன செய்வாரோ தெரியலையே என்று பயந்தார்.
அப்போது அருவாஅமாவாசை தன் போனிலிருந்து பூங்கொடிக்கு போன் பண்ணினார். ரிங் டோனை கேட்டதும் பூங்கொடியிடம் கண்ணாயிரம் ..யாரு..யாரு என்று கேட்க.. பூங்கொடி..எங்க அப்பா என்க.. கண்ணாயிரம் உடனே.. போச்சுடா.. மறுபடியும் வர்ராறா.. அவர் கேட்டா நான் இல்லைன்னு சொல்லு என்று பூங்கொடியிடம் சொல்ல.. பூங்கொடி தலையை ஆட்ட .. கண்ணாயிரம் ஒளிவதற்காக.. ஏணியில் ஏறி மச்சுக்குப் போக முயன்றார்.
அருவா அமாவாசை போனில்.. என்னாச்சு.. நான் எவ்வளவு நேரம் கூப்பிடுறன்.. கண்ணாயிரத்தை எங்கே என்று அதட்டலாகக் கேட்டார். பூங்கொடி.. மென்மையான குரலில்.. அவர் இல்லை என்று சொல்ல.. அருவா அமாவாசை..என்ன உன் குரல் உள்ளே போகுது.. இல்லைன்னு அவன் சொல்லச் சொன்னானா என்று எகிற.. பூங்கொடி.. அது வந்து இல்லப்பா.. அவர் இங்கே இல்ல என்றார்.
அருவா அமாவாசை ஷாக்காகி.. என்ன அவன் இல்லையா.. என்ன சொல்லுற.. நான் வீட்டிலிருந்து வரும்போது இருந்தானே.. எங்கே போயிட்டான்.. நீ பொய் சொல்லுறீயா என்க பூங்கொடி.. உண்மையிலே அவர் இல்லப்பா என்று சொன்னார்.
என்ன இது..என்னை ஏமாத்தப் பாக்கிறீயா..அவன் தான் உன்னை அப்படி சொல்லச் சொல்லியிருப்பான்..நான் வந்தேன் அருவாளால் இரண்டு துண்டா வெட்டிப் போட்டிருவன் என்று கத்த பூங்கொடி.. அப்பா வேண்டாம்.. அப்பா வேண்டாம் என்று கண்ணீர் சிந்த.. அருவாஅமாவாசை.. ஏய் அழாத.. அப்படி ஒண்ணும் செய்யமாட்டேன்.. அவனை எங்கே.. எங்கிட்ட மட்டும் சொல்லு.. பூங்கொடி..ஆவேசமாக…அவர் மேலே போயிட்டாருப்பா என்று கதறி கதறி அழுதார்.
என்னது மேலே போயிட்டானா.. அய்யோ.. காலையிலேத்தானப் பார்த்தேன்.. அதுக்குள்ளே மேலே போயிட்டானே.. நான் என்ன செய்வேன் என்று அருவாஅமாவாசை அழ.. அதைப்பார்த்த மோட்டார்சைக்கிள் வாலிபர்.. என்னங்க.. ஏன் அழுறீங்க என்று கேட்டான்.
அதற்கு அவர்..கண்ணாயிரம் மேலேப் போயிட்டான்..ஆ..ஆ.ஆ.. நான் காதைதான் கடிச்சேன்.. வேற ஒண்ணும் செய்யலையே..மேலே போயிட்டானே என்று கதறினார்.
உடனே மோட்டார் சைக்கிள் வாலிபர்.. இதைத்தானே நாங்க அப்பவே இருந்து சொல்லிக்கிட்டு இருக்கோம்.. நீங்க கேட்கல..சரி..சரி.. நல்லவேளை பிறந்த நாள் போஸ்டர் அடிக்காம இருந்தோம். பரவாயில்லை. உங்க மகாக்கிட்ட..பாடி எங்கேன்னு கேளுங்க என்றார்.
அருவாஅமாவாசை.. அழுதபடியே..அம்மா..பாடியை எங்கேம்மா என்று கேட்க.. பூங்கொடி .. நீங்க அழாதீங்கப்பா.. டிரங்பெட்டியில் பாடி இருக்கு..என்றார்.
அருவா அமாவாசை..அய்யோ..அதுக்குள்ள ஏம்மா வச்சே என்க.. பூங்கொடியோ..அங்கேதான் பத்திரமா இருக்கும் என்றார்.
போச்சுடா..என் மகளுக்கும் புத்தி பேதலிச்சுப் போச்சு..நான் என்ன செய்வேன் என்று அருவாஅமாவாசை குலுங்கினார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர்..என்னங்க.. உங்க மகா, பாடி எங்கேயிருக்குன்னு சொல்லுறாங்க என்க.. அருவாஅமாவாசை.. அய்யோ டிரங் பெட்டியில் இருக்கு என்கிறாளே என்க மோட்டார்சைக்கிள் வாலிபர்.. ஏங்க..இதைத்தானே நாங்க அப்பவே இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்றார்.
அதற்கு அருவாஅமாவாசை.. அப்ப நான் ஆவிக்கிட்டயா பேசிக்கிட்டு இருந்தேன்…அது காதை வேற கடிச்சுப்புட்டேனே..என்னை என்ன பண்ணுமே தெரியல என்க..மோட்டார் சைக்கிள் வாலிபர்..பயப்படாதீங்க..அப்படியே கொண்டு போய் புதைச்சிடுவோம்.. அப்புறம் உங்களை ஒண்ணும் செய்ய முடியாது என்க அருவா அமாவாசை.. அப்படியா..அருவா வேற வச்சிருக்கேன்.. பாய்ந்து வந்தா வெட்டி வீசிடுவேன் என்று மீசையை முறுக்கினார்.
மோட்டார்சைக்கிள் வாலிபர்..ஏங்க..இப்போ மீசையை முறுக்கிறது முக்கியம் இல்ல.. மூளையை முறுக்கணும்.. பூங்கொடியிடம் நீங்க நைசா பேசி வீட்டுக்குள் போகணும்..பாடியிருக்கிற டிரங்பெட்டியை கைப்பற்றணும்..கொண்டு போய் புதைக்கணும்..அதனால பாடியிருக்கிற டிரங்பெட்டியை எப்படியாவது கைப்பற்றுங்க என்றார்.
அருவாஅமாவாசை..சரி..சரி..பூங்கொடியை மிரட்ட முடியாது.. அவா முழுகாம இருக்கா.. அதனால..பாசமா பேசி.. டிரங்பெட்டியை வாங்கிடுறேன் என்றார்.
அதைக்கேட்ட மோட்டார்சைக்கிள் வாலிபர்.. என்ன உங்க மகா முழுகாம இருக்காங்களா.. அப்போ குட்டி கண்ணாயிரம் வரப்போறார்.. இந்த நேரத்திலே கண்ணாயிரம் மேலேப் போயிட்டாரே.. என்ன செய்யுறது என்றார்.
அருவா அமாவாசை.. அதாம் எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல என்க.. மோட்டார்சைக்கிள் வாலிபர்.. நீங்க ஒண்ணும் செய்யவேண்டாம்.. உங்க மகாக்கிட்ட இருந்து பாடியிருக்கிற டிரங்பெட்டியை கண்டுபிபிடிச்சிடுங்க.. நீங்க மட்டும் உள்ளே போங்க.. நாங்க வந்தா பூங்கொடி இல்லைன்னு சொல்லும்.. பயப்படாம போங்க என்க.. அருவாஅமாவாசை அருவாளை வேட்டிக்குள் மறைத்துவைத்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்தார்.
இந்த நேரத்தில் கண்ணாயிரம் மச்சியில் ஏறி.. உடம்பெல்லாம் மறைத்துக்கொண்டு டிரங்பெட்டிக்குப் பின்னால் மறைந்து கொண்டார்.
அப்போது அருவாஅமாவாசை.டொக்..டொக்..டொக் என்று கண்ணாயிரம் வீட்டு கதவைத் தட்டினார். (தொடரும்)
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.