காதலரை அறிவித்ததால் நடிகைக்கு வந்த வினை
1 min read27.2.2020
செய்தி வாசிப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கிய ப்ரியா பவானி சங்கருக்கு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் சீரியல் நடிகை வாய்ப்பு கொடுத்தது. கல்யாணம் முதல் காதல் வரை என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களை சீரியல் பார்க்கவைத்த நாயகி.
கண்டிப்பாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். அவரை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் படம் இவருக்கு ஒரு நல்ல மரியாதையை சினிமாவில் பெற்றுக் கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மாபியா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. இருந்தும் முன்னணி இளம் நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு வருகிறார்.
இதற்கிடையில் சமீபத்தில் எஸ் ஜே சூர்யா உடன் காதல் கிசுகிசுவில் மாட்டிக் கொண்டார். அதற்கு எஸ் ஜே சூர்யா இருவரும் நல்ல நட்புடன் பழகி வருகிறோம் என முற்றுப்புள்ளி வைத்தார்.அந்தப் பிரச்சனை பெரிதாகும் முன் தனது காதலரை அறிமுகப்படுத்தினார் பிரியா பவானி சங்கர்.
மேலும் தனது காதலரை அறிமுகப்படுத்திய பிரியா பவானி சங்கர் விரைவில் தனது திருமணத்தைப் பற்றியும் பொது மேடையில் அறிவிப்பேன் என கூறியது அவரது சினிமா வாழ்க்கைக்கு வேட்டு வைத்துள்ளது. விரைவில் ப்ரியா பவானி சங்கர் திருமணம் செய்து கொண்டு சென்று விடுவாராே என தயாரிப்பாளர்கள் பின் வாங்கியுள்ளனர்.
இதனால் இன்னும் பிரியா பவானி சங்கர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்குள் முடிந்த அளவு திரைப்படங்களில் நடித்து விடவேண்டும் எனவும் முடிவெடுத்திருப்பதாக பிரியா பவானி சங்கரின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து பட வாய்ப்புகள் குறையவே பிரியா பவானி சங்கர் தனது திருமணத்தை தள்ளிப் போடலாம் என யோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் காதலரிடமும் சிறிது மனக் கசப்பு ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.