April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கடித்த நாய்க்கு காய்ச்சல்/ . நகைச்சுவைசிறுகதை /தபசுகுமார்

1 min read

Kannayiram Kattitha naaykku Kaaichal – Short sory by thabasukumar

8.6.2021
லுங்கியை உடுத்திக்கொண்டு வாக்கிங் சென்ற கண்ணாயிரத்தைகோபமாக நாய்கடித்துவிட்டது. வீட்டுக்குச் சென்ற அவர் நாய் கடித்ததை மனைவிக்கு தெரியாமல்மறைக்க நினைத்தார். ஆனால்விதி அவரைவிடவில்லை.
வீட்டுக்குள் நுழைந்த அவரைபார்த்து அவரது மனைவி முறைத்தார். என்னங்க கஷாயம் ரெடி பண்ணிட்டு வரும் முன்னால எங்கே போனீங்க கஷாயத்தை குடிங்க என்று கத்தினார்.
அடடா, இந்த கஷாயத்துக்கு பயந்துதானே வாக்கிங் போனோம், கடைசியிலே இந்த கஷாயம் விடாது போலிருக்குதே என்று புலம்பினார். அவரது மனைவி அங்கே என்ன சத்தம் சீக்கிரம் கஷாயத்தை குடிங்க என்று விரட்டினார்.
கண்ணாயிரம் கண்களை மூடிக்கொண்டு கஷாயத்தை குடிக்க முயன்றார்.
அப்போது கண்ணாயிரம் அண்ண, கண்ணாயிரம் அண்ண என்ன ஆச்சு என்று கேட்டவாறு நான்கு பேர் வீட்டுக்கு வந்தனர்.

கண்ணாயிரம் அவரிடம் கத்தாதய்யா, மெதுவா சொல்லுய்யா என்று உதட்டில் விரல் வைத்து காட்டினார். அதை அவரது மனைவி கவனித்து விட்டார்.
என்னங்க நாய் கடிச்சுதா உண்மையை சொல்லுங்க என்றார் கோபமாக.

கண்ணாயிரம் விழிபிதுங்கிய நிலையில், நாய்கடிக்கலை என்றார்.
அவரது மனைவி அதட்டலாக ஊரில் உள்ளவர்கள் எல்லாம் நாய்கடிச்சது என்று சொல்லுறாங்க. நீங்கஏன்மறைக்கிறீங்க என்றுமீண்டும் கேட்டார். கண்ணாயிரம் அப்பாவியாக நாய்கடிக்கல கவ்விச்சு என்றார். அவரது மனைவி ஆத்திரத்துடன் நாய் பெரியநாயா என்றார். கண்ணாயிரம் வேகமாக அது பெரியநாய் இல்லை. வெறும் குட்டிநாய்தான் என்று கூறினார். குட்டிநாய் என்றாலும் விஷம்தான் என்றார் அவரது மனைவி. சரி எப்படி கடித்தது என்று அவர் கேட்டார். கண்ணாயிரம் வேகமாக லபக் என்று கடித்தது என்றார். என்ன செய்தீங்க நாய் கடிச்சுது என்று கேட்டார். கண்ணாயிரம் மெதுவாக, நம்ம வீட்டு முன்னால வந்து குரைச்சுது. ஒருகல் எடுத்து வீசினேன். கோபத்தில் கடிச்சிட்டு என்று கூறினார்.
அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார். நாய் கடிச்சதை ஏன் என்னிடம் மறைக்கப் பார்த்தீங்க. வாங்க ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார் அவரது மனைவி. ஆனால் கண்ணாயிரமோ அதெல்லாம் ஒண்ணும் செய்யாது. விடு என்றார்.
அருகில் நின்றசிறுவன், ஆ… நாய் அதுவும் வெளிநாட்டு நாய்கடிச்சிருக்கு தொப்புளை சுத்தி ஊசி போடணும் இல்லாட்டி நாய் மாதிரி குரைப்பீங்க என்று பயம் காட்டினான்.
கண்ணாயிரம் கோபத்தில் கத்தினார். உடனே அந்த சிறுவன் பார்த்தீங்களா இப்பவேகத்த தொடங்கி விட்டார். சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க என்று அவசரப்படுத்தினான்.
கண்ணாயிரத்துக்கு தொப்புளில் ஊசிபோடுவார்கள் என்றுபயம். நான்வரமாட்டேன் என்று அடம்பிடித்தார். அப்போது கண்ணாயிரத்தை கடித்த நாய்குட்டியுடன் அதன் சொந்தகாரர் அங்கேவந்தார். யாருங்க கண்ணாயிரம் இருக்காரா இல்லையா என்றுகேட்டபடிவந்தார்.
அங்கு நின்றசிறுவர்கள் இவர்தான் கண்ணாயிரம் சொல்லுங்க என்றனர்.
உடனே அவர்மனுசனா அவர் அவரை கடிச்ச என்நாய்குட்டிக்கு காய்ச்சல். அது ரொம்ப சோர்வா இருக்கு. அதுசாப்பிடல. தூங்கல. அதைப்பார்த்து எனக்கு மனசு தாங்கல. கண்ணாயிரம் கொரானா தடுப்பூசி போட்டாரா இல்லையா. என்று கடுகடுத்தார்.
கொரனா தடுப்பூசியா அதைநான் போடலே. அதை ஏன் கேட்கிறீங்க என்றார் அப்பாவியாக. அதற்கு அவர் என் நாய்குட்டிக்கு காய்ச்சல் அடிக்குதே என்றார். அதற்கு கண்ணாயிரம் கோபமாக எனக்கு காய்ச்சல் அடிக்கலையே.. என்னைவிடுங்க என்றார்.
யாரும்கேட்கவில்லை. கண்ணாயிரம்தப்பி ஓடமுயன்றார். அனைவரும் அவரை மடக்கி பிடித்து அங்கு வந்த ஆட்டோவில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர்

  • வே. தபசுக்குமார், புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.