May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

‘கண்ணாயிரத்தை கலக்கிய மோரு/ நகைச்சுவை கதை/ தபசுகுமார்

1 min read

Buttermilk that stirred Kanayiram/ comedy story/ Tabasukumar

15.3.2023
கண்ணாயிரம் குற்றாலத்துக்கு தன்மனைவி பூங்கொடியுடன் அருவியில் குளிக்கசென்றார்.கண்ணாயிரம் உடல் முழுவதும் எண்ணை தேய்த்துக்கொண்டு சென்றதால் குளிக்கவிடாமல் போலீசார்விரட்டினர். இதனால் ஓட்டலுக்கு வந்த அவரை உடம்பில் உள்ள எண்ணையை துணியால் துடைத்து எடுங்கள் மதியம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் குளிக்கப்போவோம் என்று பூங்கொடி சொல்ல கண்ணாயிரம் உடலில் உள்ள எண்ணையை துடைத்துவிட்டு உற்சாகமாக ஆட அவருக்கு இடுப்பு பிடித்துகொண்டதால் பூங்கொடி அவரது இடுப்பை தடவிவிட்டார்.
அப்போது கண்ணாயிரம் கத்தியதை அவர் மனைவி அவரை கழுத்தை நெரிப்பதாக நினைத்து வந்து பூங்கொடியை அதட்ட அவர் அவர்களை மிரட்ட ஓரே கலவரமாக இருந்தது. இறுதியில் கண்ணாயிரம் தன்மனைவி தன் கழுத்தை நெரிக்கவில்லை..இடுப்பை தடவிவிட்டாள் அவள் அடிப்பதற்கு முன் தப்பிப்பதற்காக நான் காப்பாத்துங்க என்று கத்தினேன் என்று சொல்ல ஓட்டல் ஊழியர்கள் கண்ணாயிரத்தை திட்டிவிட்டு சென்றனர்.
பின்னர் ஓட்டல் ஊழியர் ஒருவர் பூங்கொடி சொல்லியபடி இரண்டு மீன்சாப்பாடு எடுத்துவந்தார். கண்ணாயிரம் மகிழ்ச்சியோடு வாங்க வாங்க என்று ஆசையோடு சாப்பாட்டை வாங்கிவைத்தார். பூங்கொடி அவரிடம் கையை கழுவிட்டுவந்து சாப்பிடுங்க என்று சொல்ல கண்ணாயிரம் விசிலடித்தபடி பாத்ரூமுக்கு சென்று கையை கழுவிவிட்டு வேகமாக ஓடிவந்தார்.
பூங்கொடி உடனே சரி மெதுவா சாப்பிடுங்க..நான்பாத்ரூம்போயிட்டுவர்ரோம் என்றபடி அங்கு சென்றார். கண்ணாயிரம் சரி..சரி..என்றபடி உணவு பார்சலைபிரித்தார்.
ஒன்றில் மீன்குழம்பு இருந்தது. மற்றொன்றில் ரசம் மற்றும் கூட்டு இருந்தது.
இதைப் பார்த்ததும் கண்ணாயிரத்துக்கு நாக்கில் எச்சில் ஊறியது.அரிசி சாதம் மல்லிகை பூப்போல் காட்சி தந்தது.
கண்ணாயிரம் அதில் மீன்குழம்பை ஊற்றினார். குழம்பில் பெரிய மீன் கிடந்தது. ஆஹா..எவ்வளவு பெரிய மீன்..என்று கூறியவாறு மீனை பிய்த்து பார்த்தபோது முள் அதிகமாக இருந்தது. எதை முதலில் சாப்பிடுவது..ஒருவாய் சாப்பாடு…ஒருவாய் மீன்.. இதுதான் சரி என்று நினைத்தார்.
குழம்பில் சோறை பிசைந்து ஒருவாய் விழுங்கியவர் அடுத்து மீனை ஒருகடி கடித்து விழுங்க முயன்றார். ஆனால் விழுங்க முடியவில்லை.
மீன் முள் தொண்டையில் சிக்கிக்கொண்டது. ஆ..ஹா..ஓ..ஓ. என்று வாயை அங்கும் இங்கும் திறந்து கத்தினார்.
பாத்ரூம் சென்ற பூங்கொடி என்ன ஆச்சு என்றபடி ஓடிவந்தார். கண்ணாயிரம் விழிபிதுங்கி வாயை வாயை காட்ட..பூங்கொடியோ..என்ன மீன் முள்ளை விழுங்கிட்டியளா.. போச்சுடா..என்ன அவசரம்…என்ன அவசரம் உங்களுக்கு என்று திட்டியவாறு வெறும்சோறை உருண்டைபிடித்து.. இந்தாங்க இதை விழுங்குங்க..என்று கொடுத்தார்.
கண்ணாயிரம் வெறு சோறு வேண்டாம், மீன் குழம்பில் தொட்டு தரும்படி செய்கையில் சொன்னார். ஆனால் வெறும்சோறைதான் விழுங்க வேண்டும் என்று பூங்கொடி கத்தினார்.
அதன்பின் கண்ணாயிரம் சோறு உருண்டையை வாங்கி..வாயுக்குள் தள்ள அது வெளியே தள்ள பூங்கொடி கையால் உள்ளே தள்ள கண்ணாயிரம் திணறினார்.
இதைப்பார்த்த பூங்கொடி டம்ளரில் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்க கண்ணாயிரம் வாங்கி மடக்கென்று குடித்தார். பூங்கொடி அவர் நெஞ்சை தடவிவிட்டார். கண்ணாயிரம் அப்பாட என்று பெருமூச்சுவிட்டார்.
பூங்கொடி அவரிடம் என்ன இது நம்ம ஊரில சாப்பிடுற வஞ்சிர மீனுன்னு நினைச்சியளா.. அதை அப்படியே விழுங்கலாம்.. இங்கே உள்ள மீனில் முள் அதிகம். இதை அப்படியே சாப்பிட்டா எப்படி என்று சத்தம் போட்டார்.
கண்ணாயிரம் ஆமா தப்புதான்..மீன் எனக்கு வேண்டாம்..வேறும் குழம்பில் சாப்பிடுகிறேன் என்றபடி சாப்பிட்டார்.
காரம் அதிகமாக இருந்ததால் அய்யோ உரைக்குதே..அய்யோ உரைக்குதே என்று அலறினார். ஏங்க..சத்தம் போடாதீங்க..என்னமோ ஏதோ என்று மீண்டும் ஓட்டல் பாய்ஸ் வந்திடப்போறாங்க என்று அதட்டிவிட்டு டம்ளரில் உள்ள தண்ணீரை கொடுத்தார்.

அதை குடித்தபோதும் கண்ணாயிரத்துக்கு உரைப்பு குறையவில்லை.. ஆ.. உரைக்குதே… அய்யய்யோ உரைக்குதே என்று புலம்பினார். பூங்கொடி அவரிடம் சத்தம் போடாதீங்க..மோர் வாங்கித்தருகிரேன் என்று சொல்லிவிட்டு இண்டர்காமில் பேசி மோர் பாக்கெட் இரண்டு கொண்டுவரும்படி சொன்னார்.
சிறிது நேரத்தில் ஓட்டல் ஊழியர் இரண்டு மோர் பாக்கெட்டுகளுடன் ஓடிவந்தபோது கண்ணாயிரம் அய்யோ எரியுதே..யாராவது காப்பாத்துங்களே என்று கத்த அதைப்பார்த்த ஓட்டல் ஊழியர் ஆ..இன்னும் பிரச்சினை தீரலையா என்று கேட்க, பூங்கொடி உஷாராகி..ஏம்பா தப்பா நினைச்சிக்கிடாத…அவர் மீன்குழம்பு சாப்பிட்டதில் உரப்பு தாங்காமல் இப்படி புலம்புறாரு..அவரை நான் ஒண்ணும் பண்ணல என்றார்
.அதைக்கேட்ட ஓட்டல் ஊழியர் கோபத்தில் கண்ணாயிரத்தை ஒரு முறைமுறைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
கண்ணாயிரம் அப்போதும் அய்யோ எரியுதே எரியுதே என்று கத்த பூங்கொடி மோர் பாக்கெட்டை பிரித்து டம்ளரில் ஊற்றி கண்ணாயிரத்திடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி மடக்கென்று குடித்தார்.
சரி போதும் இனி சாப்பிடுங்க என்று பூங்கொடி சொல்ல..கண்ணாயிரம் மீதி உள்ள மோரை தரும்படி கேட்க..அவர் மீதி உள்ள மோரையும் டம்ளரில் ஊற்றிக்கொடுக்க அவர் அதை. வாங்கி மடக்மடக் என்று குடித்தார். பின்னர் மீண்டும் மீன் குழம்புடன் சோறை பிசைந்து லபக் லபக்கென்று விழுங்கினார்.

மீண்டும் உரைத்ததால் ஆ..ஊ என்று கத்த பூங்கொடி கோபத்தில்..ஏன் குழம்பை அதிகம் விழுங்குகிறீங்க.. சாப்பாட்டை அதிகம் சேர்த்து சாப்பிடவேண்டியதுதானே என்று சத்தம்போட்டார். கண்ணாயிரம் மெல்ல உரைப்பு தாங்கமுடியல..மோர்குடு..இன்னொரு பாக்கெட் இருக்கில்லா என்றார்.
பூங்கொடி உடனே ஏங்க..ஒரே நேரத்திலே மோரை அதிகம் குடிச்சா ஒண்ணக்கிடக்க ஒண்ணு ஆயிடும்..தண்ணீ குடிங்க என்றபடி டம்ளரில் தண்ணீரை ஊற்றிக் கொடுத்தார்.
கண்ணாயிரம் அதை வாங்கிகுடித்துவிட்டு மீண்டும் உரைக்குது உரைக்குது மோர் மோர் என்று கத்த பூங்கொடி போனால் போகுது என்று மோர் பாக்கெட்டை எடுத்து கையில் கொடுத்தார்.
கண்ணாயிரம் அதைவாங்கி பாக்கெட்டை கடித்து கொட கொடவென்று வாயுக்குள் மோரை ஊற்றினார்.
போதும் போதும் என்று பூங்கொடி சொல்லியும் கண்ணாயிரம் கேட்காமல் முழுவதையும் குடித்தார்.வயிறு பம்மென்றாகிவிட்டது. ஆனாலும் சாப்பாட்டைவிட மனம் இல்லை.மீண்டும் சோற்றுடன் குழம்பை கொஞ்சம் சேர்த்து பிசைந்து உருட்டி வாயுக்குள் தள்ளிக்கொண்டே இருந்தார். ஏங்க..இப்படி சாப்பிடுறீங்களே..செமிச்சிடுமா என்று பூங்கொடி கேட்க…கண்ணாயிரம் மெல்ல ஏன் செமிக்காது..அதெல்லாம் செமிக்கும். இந்த ரசம் இருக்கில்ல ரசம்..அதை குடிச்சா சரியாபோகும் என்று சிரித்தார்.
அதைப்பார்த்த பூங்கொடி..போச்சு..ரசம் வேண்டாங்க..கலக்கிடும் என்று எச்சரித்தார்.
ஆனால் கண்ணாயிரம் கேட்கவில்லை.அதெல்லாம் ஒண்ணும் செய்யாது..சாப்பிட்டது செமிக்கணுமில்லையா..என்ன நான் சொல்லுறது.ரசத்தை வேஸ்டா பண்ணமுடியும்..என்றவாறு ரச பாக்கெட்டை கடித்துரசத்தை உறிஞ்சினார்.
ஆ..ஹா ரசம் என்னா டேஸ்டா இருக்கு என்றபடி ரசம் முழுவதையும் குடித்து முடித்தார். அப்பாட..வயிறு புள்ளாயிட்டு…இனி ஒண்ணும் சாப்பிடமுடியாது.. பூங்கொடி..நான் கை கழுவிட்டு கொஞ்சம் ரெஸ்டு எடுக்கிறேன் என்றார்.
சரி..சரி..கையை கழுவிட்டு வந்து கொஞ்சம் படுங்க என்றார் பூங்கொடி.
உடனே கண்ணாயிரம் தள்ளாடியபடி எழுந்துசென்று கையை கழுவிவிட்டு வந்து படுத்தார்.
சிறிது நேரத்தில் அவரிடமிருந்து குறட்டை சத்தம் வந்தது.பூங்கொடி மீன் குழம்பு பார்சலை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்தார்.
மீன் முள் அதிகமாக இருக்கு..காரம் சாஸ்தி என்றபடி கைகழுவிவிட்டு வந்தார். படுக்கையில் சற்று சாய்ந்து ஓய்வெடுத்தார்.
மணி மதியம் மூன்றாகியது. அப்போது ஹாலிங்பெல்லை அழுத்திய பயில்வான் கதவை திறந்த பூங்கொடியிடம்..ம் அருவியில குளிக்க சீக்கிரம் கிளம்புங்க என்று சொல்லிவிட்டு சென்றார்.
உடனே பூங்கொடி தூங்கிக்கொண்டிருந்த கண்ணாயிரம் முதுகில் ஓங்கி தட்டி எழுப்பினார்.
கண்ணாயிரம் கொட்டாவி விட்டபடி..என்ன என்றபடி எழுந்தார். குளிக்க போகணுமல்லா..எழும்புங்க எழும்புங்க என்று பூங்கொடி அவசரப்படுத்தினார்.
கண்ணாயிரம் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார்.
கைகால் முகம் எல்லாம் கழுவிவிட்டு வெளியே வந்தார். பின்னர் பூங்கொடியும் பாத்ரூமுக்குள் சென்றுவந்தார்.
கண்ணாயிரம் அருவியில் குளிக்க துண்டுஎடுத்துக்கொண்டார். பக்கெட்டில் தாமிரபரணி தண்ணீர் இருப்பதால் அதை எடுக்கவில்லை. இரண்டு வேட்டி எடுத்துக்கொண்டார். உள்ளே விடாவிட்டால் செம்பில் தண்ணீரை அள்ளி குளிக்கலாம் என்று செம்பை தூக்கினார். தலையில் துண்டை கட்டினார். வேட்டிகளை தோளில் தொங்கவிட்டார். குளிக்கச்செல்ல தயாராக வாசலுக்கு சென்றார். பூங்கொடியும் சேலை துண்டு போர்வை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்.
ஏங்கே தலையிலே எண்ணை இல்லல்லா..ம் எண்ணை தெரியல..இப்பம் நல்லா அருவியிலே குளிங்க…என்ன என்று கண்ணாயிரத்திடம் பூங்கொடி சொன்னார்.
கண்ணாயிரம் மகிழ்ச்சியில்..ம்..ம்..என்று அசைந்தார். பூங்கொடி..ம் ஆடாதீங்க மறுபடியும் இடுப்பு பிடிக்கப்போகுது என்றபடி கதவை பூட்டினார்.
கண்ணாயிரம்..நான் அருவியிலே குளிக்கப்போறேன் என்று ஒரு கையை மேலே தூக்கி கத்தினார். வயிற்றுக்குள் ஏதோ குடக் என்றது.கண்ணாயிரம் என்னாச்சு என்று வயிற்றை தடவியபடி ஆ..ஒண்ணுமில்ல போகலாம் என்று ஒரு அடி வேகமாக எடுத்துவைத்தார். வயிற்றுக்குள் கடமுடா என்றுசத்தம்..என்ன வயிறு இப்படி இரையுது..ஏதோ சிக்கல் வருது போல..பூங்கொடி கதவை திற பூங்கொடி கதவை திற என்று கண்ணாயிரம் கத்தினார்.
என்ன ஆச்சு..என்று பூங்கொடி பதிலுக்கு கத்த ஏய்..அவசரமா பாத்ரூம் போகணும் கதவைதிற என்று வயிற்றை பிடித்துக்கொண்டு சொல்ல.. இங்கே ஏதாவது ஆயிடப்போகுதுன்னு பூங்கொடி கதவை திறந்தார்.
கண்ணாயிரம் உள்ளே ஓடிப்போய் பாத்ரூம் கதவை சாத்திக்கொண்டார். பதினைந்து நிமிடமாகியும் கதவை திறக்கவில்லை.என்ன ஆச்சு என்று பூங்கொடி கத்த கண்ணாயிரம்..முடியல..முடியல..மோர் ஒரு பாக்கெட் குடிச்சேனா..இரண்டு பாக்கெட் குடிச்சனா என்று குளறியபடி கேட்டார்.ம்.. அதுவா இப்போ முக்கியம் சீக்கிரம் வாங்க என்று சத்தம் போட்டார் கண்ணாயிரம்..ம்..சத்தம் போடாதே..பிச்சுக்கிட்டு போகுது என்று கண்ணாயிரம் குளறியபடி சொல்ல பூங்கொடி தலையில் அடித்துக்கொண்டார்.
மோரு ரசம் சேர்ந்து குடிச்சா கலக்காம என்னசெய்யும்…உள்ளே இருங்க என்றார்.
கண்ணாயிரம் பதில் சொல்லாமல்…ஓ..ஓ..என்று வயிற்றை தடவியபடி…கண்களை உருட்டினார்

-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.