May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை குழப்பிய பூவா..தலையா?../ நகைச்சுவை கதை / தபசுகுமார்

1 min read

Flower or Head? confused Kannayiram / Comedy story / Tabasukumar

5.9.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் குளிக்க முடியாததால் பாபநாசம் அகத்தியர் அருவியில் தலையில் எலுமிச்சம் பழம் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்தார்.புது உற்சாகம் வரும் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும் என்று மகிழ்ச்சியுடன் அருவியில் இருந்து வெளியே வந்தார்.
கண்ணாயிரத்தை பார்த்தவர்கள் என்ன முடி பஞ்சா பறக்குது என்று சொல்ல கண்ணாயிரமோ எலுமிச்சம் பழம் தேய்த்து குளித்தால் கருப்பான முடி பஞ்சு போல் வெள்ளையாக மாறிவிட்டதோ என்று நினைத்து பதட்டமானார்.
அப்போது அங்கு வந்த பூங்கொடி குளித்துவிட்டு வந்த கண்ணாயிரத்தை பார்த்து என்னங்க..முடி பூப்போல இருக்கு என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு பகீர் என்றது. உடனே அவர் அவசரமாக…பூங்கொடி ..என்ன பூ மாதிரி இருக்கு என்று கேட்க.. பூங்கொடி உடனே..மல்லிகை பூமாதிரி இருக்கு என்று சொல்ல.. கண்ணாயிரம்..ஆ.. போச்சுது போ..முடி ஒண்ணுதான் கருப்பா இருந்துச்சு.. எல்லோரும் பாராட்டுனாங்க.. இப்போ.. அதுவும் போச்சா..அருவியிலே எலுமிச்சம் பழம் தேய்ச்சி குளிச்சா உற்சாகம் வரும் என்று சொன்னாங்க.. இப்போ இருந்த உற்சாகமும் போச்சா என்று புலம்பினார்.
அதை கேட்ட பூங்கொடி..ஏங்க..முடி நல்லாதான இருக்கு..ஏன் அழுறீங்க என்று கேட்க.. கண்ணாயிரமோ.. என்ன நல்லாயிருக்கு.. சொல்லுங்க என்றார்.
அதற்கு பூங்கொடி..என்னங்க..முன்னாலே முடி சில்லாட்டை மாதிரி.. பண்ணி முடிமாதிரி குண்டக்க மண்டக்க இருக்கும்.. இப்போது சும்மா மல்லிகை பூவாட்டம் இருக்கு என்று சொல்ல.. கண்ணாயிரம் பரப்பரப்பாக மல்லிகை பூவாட்டம் எப்படி இருக்கு என்று கேட்க.. பூங்கொடியோ..அதுவா அழகா இருக்கு என்று சொன்னார்.
கண்ணாயிரமோ..எப்படி அழகாக இருக்கும்.. அசிங்கமா இருக்கும். நீ மட்டும் எலுமிச்சம் பழத்தை தேய்த்து குளிக்காமல் எனக்கு மட்டும் எலுமிச்சம் பழத்தை தேய்ச்சி முடியை கெடுத்திட்ட என்று குற்றம் சாட்டினார்.
அதை கேட்ட பூங்கொடி.. என்னங்க உளறுறீங்க.. எலுமிச்சம் பழம் தேய்த்துகுளிச்ச பிறகு முடி மல்லிகை பூமாதிரி நல்லாத்தானே இருக்கு என்று சொல்ல கண்ணாயிரம் கோபத்தில் என்ன பூங்கொடி.. புரியாம பேசுற.. சுடிதார் சுதாவும் தலையில் எலுமிச்சம் பழத்தை தேய்த்துதான் குளிச்சுது.. அதுக்கு முடி கருப்பா அழகாகத்தானே இருக்கு.. எனக்கு மட்டும் எப்படி முடி மல்லிகை பூ மாதிரி மாறிச்சு என்று தலைமுடியை தடவியவாறு ஏங்கினார்.
அதைப் பார்த்த பூங்கொடி.. ஏங்க.. சும்மா ஏங்கிறது இருக்கட்டும்.. சுடிதார் சுதா எலுமிச்சம் பழத்தை தேய்ச்சு குளிச்சது உங்களுக்கு எப்படி தெரியும்.. என்று கேட்க.. கண்ணாயிரம் பிரச்சினை புரியாமல்.. சுடிதார் சுதா எலுமிச்சம் பழத்தை தேய்ச்சி குளிச்சதை நான்தான் அப்ப.. அப்ப.. யாருக்கும் தெரியாம எட்டிப்பாபார்த்தேனே..என்று சொல்ல..

பூங்கொடி புயலாக மாறி..பெண்கள் குளிக்கிற பக்கத்தில உங்களுக்கு என்ன பார்வை.. என்று அவர் தலையில் குட்டுவைக்க.. கண்ணாயிரம் நிலை குலைந்து போனார்.

நான் அப்படி பாக்கல.. சுடிதார் சுதா எத்தனை எலுமிச்சம் பழம் தேய்க்கான்னு பார்த்தேன். அவா ஒரு எலுமிச்சம் பழம்தான் தேயச்சு குளிச்சா.. அதனால அவா முடி மாறல .. மூணு பழம் தேய்ச்சதாலே என் முடி மல்லிகை பூப்போல மாறிட்டு என்று வருத்தப்பட்டார்.
இதை கவனித்துக்கொண்டிருந்த பயில்வான், “இதுக்கு எதுக்கு வருத்தப்படுற.. கண்ணாயிரம்.. இது நல்ல விஷயம் தானே”.. என்று சொல்ல.. கண்ணாயிரமோ..நீங்க தப்பா பேசாதீங்க..முதல்ல நீங்க..முடி பஞ்சுமாதிரி இருக்கு என்று சொன்னீங்க.. இப்போ மல்லிகை பூ மாதிரி இருக்கின்னு சொல்லுறீங்க.. எது சரி..என்று கிடுக்கி பிடி போட.. அதுவா.. பஞ்சுமாதிரி தான் இருக்கு என்று பயில்வான் சொல்ல.. பஞ்சா இருக்கா…பஞ்சு மாதிரி இருக்கா என்று கண்ணாயிரம் கேட்க.. அட போப்பா..உன்னோட தொந்தரவா போச்சு.. பஞ்சா இருந்துச்சு என்று சொல்லி பயில்வான் தப்பிக்க முயல.. பஞ்சுன்னா..மரத்தில் உள்ள இலவம் பஞ்சா….செடியில் வெடிக்கும் காட்டன் பஞ்சா.. என்று கண்ணாயிரம் கேட்க.. பயில்வான் தெரியலப்பா.. நீயே கண்ணாடியில பாத்துக்க என்று சொல்லிவிட்டு நகர்த்துவிட்டார்.
கண்ணாயிரமும் அதுவும் சரிதான்..யாராவது கண்ணாடி இருந்தா கொடுங்களே என்று கத்த அங்கிருந்த ஒருத்தர் கண்ணாடியை கொடுக்க..யோவ் ..என்னையா மூக்கு கண்ணாடியை கொடுக்கிற.. முக கண்ணாடியை கொடுங்க என்று கண்ணாயிரம் எகிற.. அவர்.. யோவ் நீரு மொட்டையா.. கண்ணாடின்னுதானே கேட்டீர்.. அதான் மூக்கு கண்ணாடியை கொடுத்தேன் என்று சொல்ல.. கண்ணாயிரம் மொட்டையா.. என்றபடி தலை முடியை தடவி பார்த்துக்கிட்டு யோவ் நானே தலைமுடி மல்லிகை பூ மாதிரி ஆயிட்டு என்று கவலை படுறேன்.. நீ என்னடான்னா மொட்டை கிட்டன்னு சொல்லுற.. ஓடி போ என்று விரட்டினார்.
முக கண்ணாடிக்கு எங்கே போவேன் என்று புலம்பிய போது சுடிதார் சுதா.. தனது சின்ன கைப்பை திறந்து சிறிய அளவிலான கண்ணாடியில் முகம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதை பார்த்த கண்ணாயிரம்..அந்த கண்ணாடியை கேட்கலாம் என்று நினைத்தார். ஆனால் பூங்கொடி ஏசுவாள் என்று எண்ணியவர்… என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
பின்னர் மெதுவாக சுடிதார் சுதா பின்னால் போய் மெல்ல எட்டிப்பார்த்தார். கண்ணாயிரத்தின் தலையை தவிர மற்ற பாகம் தெரிய கண்ணாயிரம் டென்சன் ஆனார்.
என்ன ..சரியா தெரிய மாட்டேங்குதே.. என்ன செய்ய என்றபடி சுடிதார் சுதா கண்ணாடியை அசைப்பதற்கேற்ப அங்கும் இங்கும் எட்டிப்பார்த்தார்.
இதைப் பார்த்த பூங்கொடி கோபத்தில்..கண்ணாயிரம் பின்னால் சென்று அங்கு என்ன தெரியுது என்று கேட்க.. சரியா தெரியல.. என்று கண்ணாயிரம் சொல்ல.. எது சரியா தெரியலன்னு பூங்கொடி கேட்க.. அதுவா எந். தலை.. என்று கண்ணாயிரம் வேகமாக சொல்ல.. பூங்கொடியோ.. கண்ணாயிரம் தன்னை திட்டுவதாக நினைத்து.. அவர் காதை திருகினார்.
கண்ணாயிரம் ஆ..என்று கத்த அனைவரும் சிரித்தனர்..
-வே.தபசுக்குமார்.புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.