கண்ணாயிரத்தை சிறைவைத்த குரங்குகள்/நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min readThe Monkeys Who Imprisoned Kannayira/Comedy Story / Tabasukumar
8.1.2023
கண்ணாயிரம் குற்றாலத்தில் தனி அறையில் தன்மனைவி பூங்கொடியுடன் தங்கியிருந்தார். இரவில் ஹாலிங்பெல்லை அடித்து யாரோ கதவை தட்டியதால் கண்ணாயிரமும் பூங்கொடியும் பயந்து போய் அறையைவிட்டு சென்று ஓட்டல் ஊழியரிடம் புகார் செய்தனர்.அவர் கண்ணாயிரம் தங்கியிருந்த அறையைப்பார்த்து விட்டு அல்வாவாங்கி வச்சிருக்கீங்களா.. அதன் வாடையைக்கண்டாலே காரங்குவிடாது என்று சொல்ல கண்ணாயிரம் தான்வாங்கிவைத்திருந்த அல்வாவை ஓட்டல் ஊழியரிடம் கொடுத்தார். மேலும் யாரும் ஹாலிங்பெல்லை அடிக்காமல் இருக்க அதன் இணைப்புஒயிரை துண்டித்துவிட்டார். இதனால் எந்த தொந்தரவும் இல்லாமல் கண்ணாயிரமும் பூங்கொடியும் படுத்து தூங்கி னர்.காலையில் கண்ணாயிரம் விழித்து கதவை திறந்துபார்த்தபோது ஒருகுரங்கின் மேல்ஏறி மற்றொரு குரங்கு ஹாலிங்பெல்லை அழுத்திக்கொண்டிருந்தது.
இதைப்பார்த்த கண்ணாயிரம் பயந்துபோய் கதவை பூட்டிவிட்டு அம்மாடி எம்புட்டு பெரிய குரங்கு…இதுதான் ஹாலிங்பெல்லை அடிச்சி அடிச்சி தூங்கவிடாம பண்ணிச்சு..இப்போ மறுபடியும் வந்திருக்கு..ஆத்தாடி..நான் என்ன செய்வேன் என்று ஏங்கினார்.
கண்ணாயிரம் உடனே பூங்கொடியை தட்டி எழுப்பினார். பூங்கொடி எழும்பு…குரங்கு வந்திருக்கு…இண்டர்ஹாமில் ஊழியரிடம் சொல்லு என்று சொல்ல பூங்கொடி கண்களை கசக்ககயபடி என்னங்க கதவு பூட்டிதான கிடக்கு..பிறகு ஏப்படி குரங்கு உள்ளேவரும் என்று சொல்ல கண்ணாயிரத்துக்கு கோபம் வந்தது. என்னசொல்லுற பூங்கொடி..கதவுக்கு வெளியே குரங்கு நிக்குது. நான் கதவை திறந்துபார்த்தேன்..எழும்பு..நாம வெளியே போனா கடிச்சிபுடும்.. இண்டர்ஹாமில் சொல்லு என்று அவசரப்படுத்தினார். பூங்கொடி பதட்டத்துடன் எழுந்து.. உண்ணமையா பாத்துங்களா..சும்மா கனவுல பாத்ததை சொல்லாதீங்க என்றார்.
கண்ணாயிரம் உடனே நீ வேணுமுன்னா கதவை திறந்துபாரு என்க பூங்கொடி மெல்ல கதவை திறக்க குரங்குகள் கோபத்துடன் உள்ளேவர முயல பூங்கொடி வேகமாக கதவை சாத்த ஒரு குரங்கின் வால் லேசாக மாட்டிக்கொள்ள அது கத்த கண்ணாயிரம் கத்த ஒரே சத்தம்.
பூங்கொடி பயந்துபோய் படுக்கையில் பாய்ந்து ஏறி இண்டர்ஹாமில் ஓட்டல் ஊழியருக்கு தகவல் சொன்னார். அவர் மற்ற ஊழியர்களுடன் கம்பு தடியுடன் அங்கு வர குரங்கின்வால் கதவில் சிக்கிக்கொண்டதால் அதை மீட்க மற்ற குரங்குகள் மரங்களிலிருந்து கூட்டமாக ஓடிவர ஒரே பரபரப்பு.கம்பு தடியுடன் வந்த ஓட்டல் ஊழியர்களை குரங்குகள் விரட்ட அவர்கள் அலறி அடித்து ஓட ஓட்டல் எங்கும் தகவல் பரவியது.
கண்ணாயிரத்தையும் பூங்கொடியையூம் குரங்குகள் சிறைபிடித்ததாக பயில்வானுக்கு செய்திகிடைத்தது. அவர் வேகமாக அங்கு ஓடிவந்தார். கண்ணாயிரத்தையும் பூங்கொடியையும் எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று ஓட்டல் ஊழியர்களிடம் வேண்டினார். அவர்கள் ஆயுத்தை வீசிவிட்டு அறிவை பயன்படுத்த நினைத்தார்கள்.
பட்டாசு வெடித்தால் குரங்கு ஓடிவிடும் என்று ஒருவர் கூறினார். அப்படியா..ஓடிப்போயி கடையிலே பட்டாசு மற்றும் தீபாவளி பட்டாசு வெடிக்கும் துப்பாக்கி வாங்கிவா என்று ஒரு ஊழியரை அனுப்பினர். அவர் வேகமாக அருகில் உள்ள கடைக்கு ஓடினார். தீபாவளியையோட்டி விற்காமல் இருந்த பட்டாசுகள் துப்பாக்கிகள் இருந்தன. எதுக்கும் பயன்படும் என்று நான்கு துப்பாக்கி மற்றும் பட்டாசுகளை வாங்கி ஒருபெட்டியில்வைத்து கொண்டுவந்தார். அறைக்குள் சிக்கிய கண்ணாயிரமும் பூங்கொடியும் இண்டர்ஹாமில்பேசி நிலவரத்தை கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று ஓட்டல் ஊழியர்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்தார்கள்.
சுடிதார்சுதாவும் வெளியே வந்து என்ன நடக்கிறது என்று பார்த்தார்.
ஓட்டல் ஊழியர்கள் ஆளுக்கொரு கையில் தீபாவளி பட்டாசு துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டார்கள். துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகளி
டமிருந்து பணைய கைதிகளை மீட்பதுபோல..துப்பாக்கிகளுடன் கண்ணாயிரம் இருந்த அறையை நோக்கிவிரைந்தார்கள். குரங்குகள் முறைத்து பார்த்தன.அவைகளை நோக்கி துப்பாக்கியால் சுட அந்த சத்தம் கேட்டு மரங்களுக்கு தாவ ஓடின. கதவில் சிக்கிக்கொண்டு தவித்த குரங்கு எழுப்பிய சத்தம் மற்ற குரங்குகளுக்கு கண்ணீரை வரவழைத்தன. அவை மரத்தைவிட்டு அகல மறுத்தன. உடனே ஒரு திரியில் தீயை கொளுத்தி அதில் பட்டாசை பற்றவைத்து எறிந்தார்கள். குரங்குகள் கிளைக்கு கிளை தாவின. ஆனால் ஓடவில்லை. ஒருவர் தீக்கனல் இருந்த திரியை காம்பவுண்டு சுவரில் வைத்துவிட்டு பாக்கெட்டில் இருந்த பட்டாசை எடுக்கமுயன்றபோது ஒரு குரங்கு பாய்ந்து அந்த திரியை தூக்கிக்கொண்டு ஓடியது. துப்பாக்கியால் சுட்டபோதும் அது கலங்காமல் ஓடி அங்கிருந்த ஓலை குடில் மீதுபோட்டுவிட்டு ஓடியது. அதில் அந்த ஓலைகுடில் தீப்பிடித்து ஓட்டல் மீது பரவ தொடங்கியது. தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றார்கள். முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்க அவர்கள்..டிங் டிங்டிங் என்று மணியடித்தபடி அங்கு விரைந்து வந்தனர். குரங்குகள் தீயணைக்கும் வண்டிமீது தாவி ஏறின. தீயணைப்பு வீரர்கள் குரங்குகளை விரட்டினார்கள். அவைகள் அங்கும் இங்கும் ஓடி பயம்காட்டின. அவர்கள் பயப்படாமல் முன்னேறிச்சென்று தண்ணீரை பீய்ச்சிஅடித்து தீயை அணைக்க முயற்சி எடுத்தார்கள். எங்கும் புகையாக இருந்ததால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர். கண்ணாயிரத்திடம் கதவை திறந்து வெளியேவாங்க…கதவில் சிக்கிய குரங்கு ஓடிடும்…உங்களை ஒண்ணும் செய்யாது என்றனர்.
ஆனால் அவர்கள் வெளியேவர பயந்தனர்.
தீயணைப்பு துறையினரிடம் சொல்ல அவர்கள் கண்ணாயிரம் இருந்த அறைக்கு விரைந்தனர். ஆனால் குரங்குகள் சீற்றத்துடன் இருந்ததால் வனத்துறையினருக்கு சொல்லுங்கள்..அவர்கள் குரங்குகளை பிடித்துவிடுவார்கள் என்றனர்.
உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கூண்டு மற்றும் வலைகளுடன் விரைந்து வந்தனர்.
கண்ணாயிரம் பயப்படவேண்டாம் என்று தகவல் சொல்ல இண்டராஹாம் பட்டனை அழுத்தினார்கள்.அதன் இணைப்பு ஓயரை குரங்குகள் கட்செய்திருந்தன. ஆ…என்னடா இது வம்பா இருக்கு என்று தலையில் அடித்துக்கொண்டார்கள். பூங்கொடியும் கண்ணாயிரமும் பயத்தில் அறையை சுற்றி சுற்றிவந்தார்கள்.
–
-வே.தபசுக்குமார்.புதுவை.